இந்த மனசு தான் சார் கடவுள்.. ஏழைகளுக்கு உதவ ரூ.600 கோடி சொத்தை தானம் செய்த உத்தர பிரதேச டாக்டர்!
லக்னோ: ஏழைக்கு உதவி செய்யக்கோரி உத்தர பிரதேச மாநில அரசுக்கு டாக்டர் ஒருவர் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகளை தானமாக கொடுத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மொராடாபாத்தை சேரந்தவர் அரவிந்த் கோயல். டாக்டர். இவரது மனைவி பெயர் ரேணு கோயல். இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
அரவிந்த் கோயல் கடந்த 50 ஆண்டுகளாக டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறுவயது முதலே இருந்து வந்துள்ளது.

கொரோனா கால உதவி
இதனால் அவ்வப்போது ஏழை மக்களுக்கு அவர் உதவி செய்து வந்தார். குறிப்பாக கொரோனா கால ஊரங்கில் 50 கிராமங்களை தத்தெடுத்து மக்களுக்கு இலவசமாக உணவுகள் வழங்கினார். மேலும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய அவர் உதவினார். மேலும் தான் டாக்டர் என்பதால் ஏழைகளுக்கு சிகிச்சைக்கும், கல்விக்கும் உதவிக்கரம் நீட்டினார்.

ரூ.600 கோடி சொத்து தானம்
இந்நிலையில் தான் மூக்கின் மேல் விரல் வைக்கும் வகையில் அரவிந்த் கோயல் பெருந்தன்மையாக தனது ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகளை உத்தர பிரதேச மாநில அரசுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். ஏழைகளுக்கு உதவும் நோக்கத்தில் அவர் தனது முழு சொத்துகளையும் மாநில அரசுக்கு தானமாக வழங்கி உள்ளார்.

25 ஆண்டுக்கு முன்பே முடிவு
இதுபற்றி அரவிந்த் கோயல் கூறுகையில், ‛‛எனது சொத்துகளை ஏழைகளுக்கு உதவி செய்யும் நோக்கில் வழங்க வேண்டும் என எனக்கு தொடர்ந்து தோன்றி வந்தது. இதனால் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே எனது சொத்தை தானமாக வழங்க முடிவு செய்தேன். அதன்படி தற்போது மாநில அரசிடம் சொத்துகளை வழங்கி உள்ளேன்'' என்றார்.

ஜனாதிபதி பாராட்டு
தற்போது சொத்துகளை அரசுக்கு எழுதி வைத்துள்ள அரவிந்த் கோயலின் செயலை ஜனாதிபதிகள் பாராட்டி உள்ளனர். தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் ஜனாதிபதிகள் பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல், ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரால் கவுரவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சொத்துகளின் தற்போதைய மதிப்பை கண்டறிய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications