தலையை வெட்டுவோம்.. மோடி-யோகியால் கூட காப்பாற்ற முடியாது! இந்து அமைப்பு டாக்டருக்கு பகீர் மிரட்டல்
லக்னோ: இந்து அமைப்புகளில் செயல்பட்டு வரும் டாக்டருக்கு வாட்ஸ்அப்பில் போன் செய்த மர்மநபர், ‛‛இந்து அமைப்பில் சேர்ந்து செயல்படக்கூடாது. இல்லாவிட்டால் தலையை வெட்டுவோம். இதனை மோடி, யோகி ஆதித்யநாத்தால் கூட காப்பாற்ற முடியாது'' என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் வசித்து வருபவர் அரவிந்த். இவர் சிகானி கேட் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார்.
மேலும் இவர் இந்து அமைப்புகளில் இணைந்து செயல்பட்டு வருகிறார். அதோடு இந்து அமைப்புகள் சார்ந்த நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

வாட்ஸ்அப்பில் வந்த போன்
இந்நிலையில் செப்டம்பர் 1ம் தேதி அவருக்கு வாட்ஸ்அப்பில் அமெரிக்க எண்ணில் இருந்து 2 முறை மிஸ்டு கால் வந்தது. இதையடுத்து அவர் அதனை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் போன் செல்லவில்லை. இதையடுத்த ஏதேனும் மோசடிக்காரர்களாக இருக்கலாம் என நினைத்த அவர் மீண்டும் அதனை திரும்ப தொடர்பு கொள்ளவில்லை. இதன் தொடர்ச்சியாக கடந்த 7 ம் தேதி மீண்டும் அவருக்கு ஒரு கால் வந்தது.

கொலை மிரட்டல்
அப்போது டாக்டர் அரவிந்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. ‛‛இந்து அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது. அவர்களுடன் சேர்ந்து செயல்படக்கூடாது. இதை மீறினால் தலை துண்டிக்கப்படும்'' என அந்த நபர் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதோடு, ‛‛ பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் கூட உன்னை பாதுகாக்க முடியாது'' என அந்த நபர் தெரிவித்துள்ளார்.

போலீசில் புகார்
இதனால் பயந்துபோன அரவிந்த் உடனடியாக சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி சர்கிள் போலீஸ் அதிகாரி அலோக் துபே கூறுகையில், ‛‛டாக்டர் அரவிந்த் சிகானி கேட் போலீஸ் எல்லைக்குட்பட்ட லோகியோ நகரில் 20 ஆண்டுகளாக கிளினிக் வைத்துள்ளார். இவருக்கு அமெரிக்காவில் உள்ள எண்ணில்இருந்து மிரட்டல் வந்துள்ளதாக புகார் அளித்துள்ளார். அதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என்றார்.

தனிப்படை அமைப்பு
இதுபற்றி காசியாபாத் எஸ்எஸ்பி முனிராஜூ கூறுகையில், ‛‛புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் எண் அடிப்படையில் விசாரணை துவங்கப்பட்டுள்ளது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications