Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியலில் ஆர்வம் காட்டும் அதிமுக மாஜி அமைச்சர் மகள்! திருமணத்துக்கு பிறகு முழுவீச்சில் கட்சிப்பணி?

Subscribe to Oneindia Tamil

மதுரை: அரசியலில் ஆர்வம் காட்டி வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினி, மிக விரைவில் முழுவீச்சில் கட்சிப்பணிகளில் இறங்கினாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லையாம்.

பள்ளிப்பருவம் முதலே பிறருக்கு உதவும் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர் பிரியதர்ஷினி.

இதனால் தான் தனது தந்தை ஆர்.பி. உதயகுமார் முன்னின்று நடத்தும் அனைத்தும் நிகழ்வுகளிலும் பங்கேற்று அவருக்கு அரசியலில் உதவிக்கரமாக இருக்கத் தொடங்கியுள்ளார் பிரியதர்ஷினி.

51 ஜோடிகளுக்கு திருமணம்

51 ஜோடிகளுக்கு திருமணம்

மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் வரும் பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி அன்று 51 ஏழை எளிய ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கவுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். இந்த 51 ஏழை ஜோடிகளுடன் சேர்ந்து அதே மேடையில் தனது மகள் பிரியதர்ஷினிக்கும் திருமணம் நடத்துகிறார் ஆர்.பி. உதயகுமார். இந்த விழாவுக்கு எடப்பாடி பழனிசாமியை தலைமை தாங்க வைப்பதுடன் தமிழகம் முழுவதும் உள்ள கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பும் விடுத்து வருகிறார்.

ஆர்.பி.உதயகுமார் மகள்

ஆர்.பி.உதயகுமார் மகள்

ஆர்.பி.உதயகுமார் மகள் பிரியதர்ஷினியை பொறுத்தவரை சிறுவயது முதலே சமூகப் பணிகளில் ஆர்வமாக செயல்படுபவர். இதனால் தான் பி.இ. முடித்துள்ள இவர் தற்போது MSW படித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் அரசியலில் உள்ள ஆர்வம் காரணமாக தனது தந்தைக்கு உதவிக்கரமாகவும் இருந்து வருகிறார். இதனால் திருமணத்துக்கு பிறகு ஆர்.பி.உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினி நேரடி அரசியலில் ஈடுபட்டாலும் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் என்ட்ரி

அரசியல் என்ட்ரி

இதனிடையே 51 ஏழை ஜோடிகளுடன் சேர்த்து தனது மகளுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திருமணம் நடத்தி வைப்பதற்கான பின்னணியில் சில அரசியல் காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும் தனது மகள் பிரியதர்ஷினியின் அரசியல் என்ட்ரிக்கான அச்சாரமாக இது அமையக்கூடும் என அவர் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. மதுரையில் அண்மையில் நடைபெற்ற அமைச்சர் மூர்த்தி இல்ல மண விழா பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் அதற்கு சற்றும் சளைக்காமல் பிரம்மாண்டம் காட்ட திட்டமிட்டிருக்கிறாராம் உதயகுமார்.

 எடப்பாடிக்கு அழைப்பிதழ்

எடப்பாடிக்கு அழைப்பிதழ்

பொதுவாக அழைப்பிதழ் கொடுப்பதற்கு மணமக்களின் பெற்றோர்கள் தான் செல்வது வழக்கம். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்கு மணமகளான ஆர்.பி.உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினியே நேரில் சென்று அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், தனது அம்மா மற்றும் தம்பியையும் ஆர்.பி.உதயகுமார் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+