ஆ.ராசாவை பெற்றதற்கு அம்மா வருத்தப்படனுமாம்.. பாஜகவைவிட அதிகமாக பாய்ந்த செல்லூர் ராஜு
மதுரை: ஆ.ராசா போன்ற மகனை பெற்றதற்கு, அவரின் அம்மா வருத்தப்பட வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
மதுரையில் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் கழிப்பறை கட்டுதல் , அங்கன்வாடி கட்டுதல் மையம் ஆகியவற்றுக்கான பூமி பூஜை விழாவானது நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜூ கூறுகையில், தமிழகம் முழுவதும் புதிய தொற்றுநோய் பரவல் அதிகமாக உள்ளது. இதற்கு அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்து மாத்திரைகள் இல்லாததே காரணம். அதுமட்டுமல்லாமல் பன்றி காய்ச்சல் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வருகிறது.

குழு அமைக்க வேண்டும்
அதனால் தொற்றுப் பரவல் காரணமாக ஏற்படுகிற காய்ச்சலுக்கு உரிய மருந்து மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே மதுரையில் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர், சுகாதார மாவட்ட அலுவலர், மாநகராட்சி ஆணையாளர் என குழு அமைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆ.ராசா பற்றி கருத்து
தொடர்ந்து ஆ.ராசா சர்ச்சை குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா போன்ற பிள்ளையை பெற்றதற்கு அவர் அம்மா வருத்தப்பட வேண்டும். ராஜா என்ற பெயர் பிரச்னையான பெயர் இல்லை. என்னுடைய பெயர் கூட ராஜா தான். ஆனால் எங்களுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆ.ராசா செயல்படுகிறார்.

ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்?
சட்டம் ஒழுங்கு ஏற்கனவே கேலிக் கூத்தாக இருக்கக்கூடிய நிலையில் ஊடகங்கள் அனைத்திலும் ஆ.ராசா குறித்த பேச்சுக்கு கண்டனங்கள் வருகின்றன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் பிறப்பு குறித்தும் ஆ.ராசா தவறாக பேசி இருக்கிறார். எனவே முதலமைச்சர் ஸ்டாலின் ஆ. ராசாவிற்கு வாய்பூட்டு போட வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆ.ராசா விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் அமைதியாக இருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம்
தொடர்ந்து, தமிழர்களைப் பொறுத்தவரை ஜாதி மதம் பார்க்காமல் பழகி வருகிறோம். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன. என்ன தவறு நடந்தாலும் குரல் கொடுக்க தயங்குவது ஏன்? என கேள்வி எழுப்பினார். அதேபோல், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகள், திருமாவளவன் உட்பட அனைவரும் மௌனமாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சி என்ற நிலை இல்லாமல் போய்விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications