மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

‘முதல் மரியாதை' கடவுளுக்கு மட்டுமே மனிதனுக்கு அல்ல! நீதிமன்றம் அதிரடி உத்தரவு! தீர்ப்பு விபரம் இதோ!

Google Oneindia Tamil News

மதுரை : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோவிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்க கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில், கோவில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே மனிதனுக்கு அல்ல என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கப்படவில்லை என்பதை அரசு தரப்பில் உறுதிப்படுத்த உத்தரவிட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் வடவன்பட்டியை சேர்ந்த சேதுபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.

மதுரை ஆதீனம் ஒரு தமிழ்த் தேசியவாதி.. நான் அவருக்கு ஃபுல் சப்போர்ட்- வரிந்து கட்டும் சீமான்மதுரை ஆதீனம் ஒரு தமிழ்த் தேசியவாதி.. நான் அவருக்கு ஃபுல் சப்போர்ட்- வரிந்து கட்டும் சீமான்

கோவில் திருவிழா

கோவில் திருவிழா

அதில்," சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வடவன்பட்டி பகுதியில் உள்ள சண்டி வீரன் கோவில் திருவிழா மற்றும் எருதுகட்டு நிகழ்ச்சி வருகின்ற ஜூன் 17ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இங்கு நடைபெறக்கூடிய கோவில் திருவிழாக்களில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடுவார்கள்.

முதல் மரியாதை நிகழ்ச்சி

முதல் மரியாதை நிகழ்ச்சி

கோவில் திருவிழா மற்றும் எருதுவிடும் நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் வடவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவருக்கு ஜாதி அடிப்படையாகக்கொண்டு முதல் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. இது சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.

மனுத்தாக்கல்

மனுத்தாக்கல்

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வாட்டாச்சியர் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு யாருக்கும் எந்த முதல் மரியாதையும் செலுத்துவது இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

உத்தரவு

உத்தரவு

இந்த மனு நீதிபதி விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவில் திருவிழாக்களில் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே மனிதனுக்கு அல்ல என்று கூறிய நீதிபதி மனுதாரரின் கோரிக்கையை ஏற்று கோவிலில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்க வேண்டாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.

English summary
In a case seeking an order not to pay first respect to the individual in the temple, chennai high court madurai bench judge opined that first respect in the temples is only for God not for man.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X