Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையம் - மு.க ஸ்டாலின் திறப்பு

மதுரை அருகே உள்ள தோப்பூரில் அமைக்கப்பட்டுள்ள 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருமங்கலம் அருகே தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனோ சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த சிகிச்சை மையத்தில் அனைத்து படுக்கைகளிலும் கான்சென்ரேட்டர் எனப்படும் அக்சிஜன் செறிவூட்டி கருவி பொறுத்தபட்டுள்ளது. அனைத்து படுக்கைகளிலும் ஆவி பிடிப்பதற்கான கருவி தனித்தனியாக பொறுத்தபட்டுள்ளது.

Recommended Video

    தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையம் - மு.க ஸ்டாலின் திறப்பு - வீடியோ

    மதுரை மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வருகிறது. 2ம் அலையில் இதுவரை 30,521 பேருக்கு கொரோனோ பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1269 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தற்பொழுது 9146 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனோ பரவல் சராசரியாக 13 சதவீதமாக உள்ளது

     Corona treatment center with 500 oxygen beds in Madurai Toppur - MK Stalin opens

    192 இடங்கள் கட்டுப்படுத்தபட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனோ பாதிப்பு அதிகரிப்பால் சிகிச்சை பெருவதற்கான ஆக்சிஜன் படுக்கைகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிரம்பியதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்

    இந்நிலையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மதுரையில் கொரோனோ தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை மற்றும் ஆய்வு மேற்கொண்டார். இன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனோ தடுப்பு பணிகள் குறித்து அரசு அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதை தொடர்ந்து திருமங்கலம் அருகே தோப்பூரில் அமைக்கப்பட்டுள்ள 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனோ சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    இந்த சிகிச்சை மையத்தில் முதல்கட்டமாக 200 ஆக்சிஜன் படுக்கைகள் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. சிகிச்சை மையத்தை திறந்து வைக்கும் முன்னதாக முதல்வர் ஸ்டாலின், மருத்துவர்கள், சுகாதார துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இருப்பு ஆகியவற்றையும் கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மாவட்டம் முழுவதும் உள்ள 7,100 படுகைகளில் 2 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3052 ஆக்சிஜன் படுகைகள் உள்ள நிலையில் அனைத்து படுக்கைகளும் நிரம்பியுள்ளன.

    இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இதைத்தொடர்ந்து மதுரை அருகே உள்ள தோப்பூருக்கு காரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு அமைக்கப்பட்டுள்ள 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை அவர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

    இந்த சிகிச்சை மையத்தில் அனைத்து படுக்கைகளிலும் கான்சென்ரேட்டர் எனப்படும் அக்சிஜன் செறிவூட்டி கருவி பொறுத்தபட்டுள்ளது. . அனைத்து படுக்கைகளிலும் ஆவி பிடிப்பதற்கான கருவி தனித்தனியாக பொறுத்தபட்டுள்ளது. அனைத்து படுக்கைகளுக்கும் தனித்தனி மின் விசிறி அமைக்கப்பட்டுள்ளது

    ஆக்சிஜன் படுக்கைக்கான பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் தற்பொழுது 500 ஆக்சிஜன் படுக்கை கொண்ட சிகிச்சை மையம் திறக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+