நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு உண்மையா? மதுரை ஏர்போர்ட்டில் நடந்தது இதுதான்.. அதிகாரி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை விமான நிலையத்தில் ஆங்கிலத்தில் பேசக்கூறியும் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகள் மீது நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், சித்தார்த் வருகை தந்த போது விமான நிலையத்தில் நடந்தது என்ன? அவர் கூறிய குற்றச்சாட்டுக்கள் உண்மைதானா? என்று விமான நிலைய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல நடிகர் சித்தார்த் மதுரை விமான நிலையத்தில் தனது வயதான பெற்றோருடன் சென்ற போது இந்தியில் பேசி சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதாக தனது இன்ஸ்டாகிரமில் பதிவிட்டு இருந்தார்.

சித்தார்த்தின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு தினங்களாக பேசுபொருளாக மாறியுள்ளது. அரசியல் ரீதியாகவும் சித்தார்த்தின் இந்த குற்றச்சாட்டு கவனம் பெற்றது.

கடுமையாக நடந்து கொண்டனர்

கடுமையாக நடந்து கொண்டனர்

சித்தார்த் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டு இருந்த பதிவில், "காலியாக இருந்த மதுரை விமான நிலையத்தில் சுமார் 20 நிமிடங்கள் காத்திருக்க வைத்து சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் தன்னையும் தனது பெற்றோரையும் துன்புறுத்தினார்கள். எனது பெற்றோர்களின் பைகளில் இருந்த காயின்களை எடுக்குமாறு கூறினர். தொடர்ந்து எங்களிடம் இந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர். ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்திய போதும் தொடர்ந்து இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டனர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்றும் கூறினர். வேலையில்லாதவர்கள் தங்கள் அதிகாரத்தை காட்டுகின்றனர்" என்று பதிவிட்டு இருந்தார்.

நடிகர் சித்தார்த்திற்கு ஆதரவு

நடிகர் சித்தார்த்திற்கு ஆதரவு

சித்தார்த்தின் இந்த கருத்து பெரும் விவாதப்பொருளாக மாறியது. நடிகர் சித்தார்த்திற்கு ஆதரவாக
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டு இருந்தார். அவர் வெளியிட்ட பதிவில், "மதுரை விமானநிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் கோரியுள்ளேன்" என்று பதிவிட்டு இருந்தார்.

சித்தார்த்திடம் முகக்கவசத்தை அகற்றுமாறு

சித்தார்த்திடம் முகக்கவசத்தை அகற்றுமாறு

இந்த நிலையில், விமான நிலையத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து மதுரை விமான நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- சித்தார்த் சென்னை செல்வதற்காக தனது குடும்பத்தினருடன் மதுரை விமான நிலையம் வந்தார். மாலை 4.15 மணியளவில் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு படையின் சோதனை மையத்திற்கு வந்தார். சித்தார்த்திடம் முகக்கவசத்தை அகற்றுமாறும் ஐடி கார்டு காட்டுமாறும் கேட்கப்பட்டது.

ஏன் அடிக்கடி சோதனை நடக்கிறது

ஏன் அடிக்கடி சோதனை நடக்கிறது

இது வழக்கமான பாதுகாப்பு நடைமுறைதான். அவருடைய குடும்பத்தினரின் உடமைகளும் பரிசோதனை செய்யப்பட்டது. சித்தார்த்தின் சோதனை நடந்த போது பணியில் இருந்தது தமிழகத்தை சேர்ந்த பெண் வீரர்தான் பணியில் இருந்தார். அவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழில்தான் அந்த பெண் பாதுகாப்பு வீரர் பேசினார். இந்தியில் பேசவில்லை. குடும்பத்தினரின் உடமைகளை அடிக்கடி சோதனை செய்ததாக சித்தார்த்தும் அவரது குடும்பத்தினரும்தான் கோபம் அடைந்தனர். அப்போது அங்கு வந்த தெலுங்கு பேசும் பொறுப்பு அதிகாரி ஏன் அடிக்கடி சோதனை நடக்கிறது என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

குற்றச்சாட்டுக்கள் தவறானது

குற்றச்சாட்டுக்கள் தவறானது

10 நிமிடத்திற்குள் அங்கிருந்து கோபத்துடன் நடிகர் சித்தார்த் விமானம் ஏறும் இடத்திற்கு கிளம்பிவிட்டார். அவருடன் வந்தவர்களும் சென்றுவிட்டனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் யாரும் இந்தியில் பேசி சித்தார்த்திடம் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. சித்தார்த் வைத்த குற்றச்சாட்டுக்கள் தவறானது. விமான நிலையத்திற்கு வந்தது முதல் அவர் புறப்பட்டு செல்வது வரை உள்ள காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+