முதல்வர் மு.க.ஸ்டாலினின் காரை திடீரென வழிமறித்த விளையாட்டு வீரர்.. பரபரப்பான மதுரை!
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் காரை வழிமறித்து மனு கொடுத்த மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் விளையாட்டு வீரரால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
அரசு பயிற்சியாளர் வேலை வேண்டும் என்று அவர் மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுத்தார். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் அவரிடம் உறுதி அளித்தார்.

பேட்மிண்டன் வீரர்
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பேட்மிண்டன் வீரர் மற்றும் பயிற்சியாளர் பத்ரி நாராயணன். இவர் 17 பாரா பேட்மிண்டன் போட்டியில் சர்வதேச மற்றும் பல்வேறு தேசிய மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பதக்கம் வென்றவர்.இவர் கடந்த 10 ஆண்டுகளாக அரசு பயிற்சியாளர் வேலை வேண்டும் என்று மனு அளித்து வருகிறார்.

அரசு வேலை வேண்டும்
இதற்கு முன்னதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் மதுரையில் நேரில் சந்தித்து மனு அளித்திருந்தார். அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் பேட்மிண்டன் வீரர் பத்ரி நாராயணனுக்கு அரசு வேலையை கொடுக்க வேண்டும் என பரிந்துரை செய்தது.

காரை வழிமறித்தார்
ஆனால் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்த ஆய்வுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை வந்தார். அப்போது அங்கு வந்த விளையாட்டு வீரர் பத்ரிநாராயணன் திடீரென மு.க.ஸ்டாலினின் காரை வழிமறித்தார். பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர்.

மனு கொடுத்தார்
அதனை தொடர்ந்து காரை நிறுத்தக் கூறிய மு க ஸ்டாலின் பத்ரிநாராயணனை நேரில் அழைத்தார். விளையாட்டு வீரர் பத்ரிநாராயணன் தனது கோரிக்கை குறித்து தெரிவித்து கோரிக்கை மனு குறிதது மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். அவருடைய மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின் ''உடனடியாக உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும்'' என தெரிவித்தார். முதல்வரின் காரை வழிமறித்து குரலெழுப்பி நேரடியாக மனு கொடுத்ததால் கலெக்டர் அலுவலகத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications