அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றினாலும்.. மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை வரவேற்போம் - செல்லூர் ராஜு
மதுரை: தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கிடும் வகையில் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் துவங்கப்பட்டன. அதன்பின்னர் திமுக ஆட்சிக்கு வந்து விட்டது. சேலம் மாவட்டம், நவப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அம்மா மினி கிளினிக் செயல்பட்டு வந்தது.
சில நாட்களுக்கு முன்பு நவப்பட்டி அம்மா மினி கிளினிக் முன்புறம் இருந்த பெயர் பலகை திடீரென மாற்றப்பட்டது. அதற்கு பதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் படத்துடன், 'முதலமைச்சர் மினி கிளினிக்' என பெயர் பலகை வைக்கப்பட்டது.

அம்மா மினி கிளினிக்
இது அ.தி.மு.க.வினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு அம்மா மினி கிளினிக் பெயரை மாற்றுவதை கைவிட வேண்டும் என்று அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இந்த நிலையியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

கடைநிலை ஊழியர்கள் மட்டுமே...
அப்போது அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றப்பட்டது குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜு, ' அம்மா மினிகிளினிக் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தது. குறிப்பாக நகர்ப்புற, கிராமபுற சேர்த்து 2000-க்கும் அதிகமான கிளினிக் துவங்கி அனைத்து நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருந்தனர். தற்போது தமிழக அரசின் வீடு தேடி மருத்துவம் திட்டத்தில் கடைநிலை ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

அ.தி.மு.க வரவேற்கும்
அம்மா மினி கிளினிக் என்ற பெயரை முதல்-அமைச்சரின் மினி கிளினிக் என்ற பெயர் மாற்றினாலும் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் வகையிலான திட்டங்களை அ.தி.மு.க வரவேற்கும். இவ்வாறு செல்லூர் ராஜு கூறினார். இதனை தொடர்ந்து அவர் மேலும் கூறுகையில், ' அதிமுகவில் மூத்த தலைவர்களுக்குள் எந்த மனகசப்பும் கிடையாது, அன்வர்ராஜா பொது இடங்களில் ஒருமையில் பேசியது அனைத்து நிர்வாகிகளிடமும் மனக்கசப்பை ஏற்படுத்தியது,

ஜெயலலிதா நினைவிடம்
இதுபோன்ற நிலையில் கட்சி தலைமை மற்றும் நிர்வாகிகள் பொறுமையாக செயல்பட்டுள்ளனர். மேலும் அன்வர்ராஜா அதற்காக மன்னிப்பும் கேட்டு உள்ளார். ஆரோக்கியமான அரசியலை அ.தி.மு.க நடத்தி வருகிறது. ஜெயலலிதா நினைவிடம் என்பது வேறு, வாழ்ந்து மறைந்த இடம் என்பது வேறு. வேதா இல்லத்தில் ஜெயலலிதா வாழ்ந்த நினைவுகள் உள்ளது. எனவே உச்சநீதிமன்றத்திலோ., உயர்நீதிமன்றத்திலோ முறையீடு செய்து தமிழக அரசு வேதா இல்லத்தை நினைவிடமாக அறிவிக்கவேண்டும் என்று அவர் கூறினார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications