Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெருக்களுக்கு சாதி பெயரா? நீதிமன்ற படிக்கட்டேறிய சமூக ஆர்வலர்! நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மதுரை : மதுரை பொன்மேனி பிரதான சாலை பகுதியில் ராஜ் பிள்ளை என்ற சாதி பெயரில் அமைந்த தெரு பெயரை நீக்க கோரிய வழக்கில், வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை பொன்மேனி பிரதான சாலை பகுதியில் மீனாட்சி நகர் அமைந்துள்ளது. இந்த நகரின் ஒரு தெருவுக்கு ராஜ் பிள்ளை தெரு என சிலர் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

இந்நிலையில் சாதிப் பெயரை நீக்கக்கோரி, மதுரை அரசரடியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்‌.

சாதிப் பெயர்

சாதிப் பெயர்

அதில், "மதுரை பொன்மேனி பிரதான சாலை பகுதியில் மீனாட்சி நகர் அமைந்துள்ளது. பகுதியில் உள்ள இரண்டு தெருக்களுக்கு மீனாட்சி நகர் முதலாவது தெரு மற்றும் இரண்டாவது தெரு என பெயரிடப்பட்டு 1991 முதல் நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் மூன்றாம் தரப்பினர் சிலர் கடந்த 2021 நவம்பரில் மீனாட்சி நகரில் ராஜ் பிள்ளை தெரு என தேர்தலுக்கு முன்பாக பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

அமைச்சரின் ஊழியர்

அமைச்சரின் ஊழியர்

ராஜ் பிள்ளை என்பவர் அமைச்சர் ஒருவரிடம் பணி புரியும் கணேசன் என்பவரது தாத்தாவின் பெயர் ‌ இது. தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் அழுத்தம்கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மீனாட்சி நகர் இன்று இருக்கும் நிலையில் தெருவின் பெயர் மாற்றப்பட்டுள்ளதால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு அறிவிப்பு

அதோடு தமிழக அரசு தெருக்களின் பெயர்களில் சாதிப் பெயர்களை இருக்கக் கூடாது என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ராஜ் பிள்ளை என ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வைத்துள்ளது ஏற்கத்தக்கதல்ல ஆகவே மனுதாரரின் மனுவின் அடிப்படையில் சாதி பெயரில் அமைந்த தெரு பெயரை நீக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 நீதிபதி உத்தரவு

நீதிபதி உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வு வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+