படிக்காமல் ஏன் ஃபார்வர்டு செய்தீர்கள்? - எஸ்.வி.சேகருக்கு நீதிபதி கேள்வி: வழக்கை ரத்து செய்ய மறுப்பு
மதுரை: பெண் பத்திரிகையாளர்கள் பற்றிய அவதூறான பதிவை படிக்காமல் ஏன் ஃபார்வேர்ட் செய்தீர்கள் என்று பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் எஸ்.வி.சேகருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்திருக்கிறது நீதிமன்றம்.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பதிவை படிக்காமல் ஃபார்வேர்டு செய்துவிட்டு, மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா என்ற கேள்வியை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேட்டுள்ளது. மேலும் வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும், நீதிபதி தெரிவித்துள்ளார்.

பெண் பத்திரிக்கையாளர்கள்
வழக்கு குறித்த விவரம் இதுதான்: பெண் பத்திரிகையாளர்கள் நிறுவனங்களில் பணிபுரிவது இப்படித்தான் என்று.. தரக்குறைவான கருத்தை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ் வி சேகர் 2018ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் பத்திரிக்கையாளர்கள் உட்பட பல தரப்பினரும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பலர் புகார் மனுக்களை அளித்துள்ளனர்.

4 பிரிவுகளில் வழக்குகள்
அதன் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் மூன்று பிரிவுகள் மற்றும் பெண்கள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஒரு பிரிவு என 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் எஸ்.வி.சேகர்.

மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர்
இந்த வழக்கு நீதிபதி நிஷா பானு முன்னிலையில், இன்று, விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தரப்பில் அந்த பதிவை படிக்காமல் பேஸ்புக்கில் ஃபார்வேர்ட் செய்து விட்டதாகவும் அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு ரத்து கிடையாது
அதேநேரம், மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா என்று கேட்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்ய முடியாது என தெரிவித்துவிட்டார். வழக்கை மேலும், ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார் நீதிபதி.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications