பிடிக்காத கல்யாணம்.. தொலைந்து போன மதுரை திவ்யா.. 2 வருடத்தில் பட்டதாரியாக ஜார்க்கண்டில் மீட்பு
மதுரை: மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த திவ்யா என்ற இளம் பெண் திருமண வாழ்க்கை பிடிக்காததால் வீட்டை விட்டு சென்ற நிலையில் தொலைந்துபோனார், 2 ஆண்டுக்கு பின் ஜார்க்கண்டில் பட்டதாரியாக அவரை போலீசார் மீட்டனர்.- வீடியோ காலில் கலங்கிய பெற்றோரிடம் திவ்யா கலங்கியபடி பேசிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
மதுரை எல்லிஸ்நகர் பகுதியை சேர்ந்த திவ்யா என்ற 24வயது இளம்பெண் கடந்த 2017ஆம் ஆண்டு கருமாத்துர் பகுதியை சேர்ந்த உறவினருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்,
இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2019ல் தனது தாயின் வீட்டிற்கு திரும்பிய நிலையில் இருவரையும் சேர்த்து வைத்துள்ளனர்.

பெற்றோர் புகார்
பெற்றோர்கள் கணவருடன் சேர்த்து வைக்க முயற்சி செய்திருக்கிறார். இதனால் அதிருப்தி அடைந்த திவ்யா காரணத்தால் தனது வீட்டில் இருந்து வெளியேறினார்.. கடந்த 2019 மே மாதம் எஸ்.எஸ். காலனி காவல்நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து இளம்பெண் திவ்யாவை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்,

சிறப்பு படை
இதனிடையே மதுரை மாநகரில் நீண்ட நாட்களாக காணாமல் போனவர்களை கண்டறியும் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஹேமமாலா தலைமையிலான சிறப்பு படையினருக்கு திவ்யா காணாமல் போன வழக்கு மாற்றப்பட்டது,

வீடியோ கால்
இதனையடுத்து திவ்யாவை தேட தொடங்கிய நிலையில் திவ்யா அவரது செல்போனில் அடிக்கடி பேசிய விவரங்களை சேகரித்தனர். அதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கு தெரிந்த பெண் ஒருவர் மூலமாக ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்று அங்கு ஆசிரியர் படிப்பு படித்துவருவதாக போலீசிடம் கூறியிருக்கிறார். திவ்யாவை பெற்றோரிடம் செல்போன் மூலமாக வீடியோவில் காவல்துறையினர் பேசவைத்தார்கள்.

மீட்கப்படும் திவ்யா
இதனை தொடர்ந்து திவ்யா மற்றும் அவரது பெற்றோர்கள் வீடியோ காலில் கண்கலங்கியபடி கதறி அழுது பேசியிருக்கிறார். இதையடுத்து ஜார்க்கண்ட் போலீஸ் மூலம் திவ்யாவை பெற்றோரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். காணாமல் போய்விட்டதாக நினைத்த தனது மகளை காவல்துறையினர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடித்து கொடுத்ததோடு தன் மகள் பட்டதாரியாக இருப்பதை நினைத்து மனம் நெகிழ்ந்தனர்
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications