Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரையே குலுங்குது.. திக்குமுக்காடிய வாகன ஓட்டிகள்.. சிக்னலில் வந்த சத்தம்.. அங்கே பார்த்தால்? செம்ம

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் போக்குவரத்து சிக்னல்களில், வாகன ஓட்டிகளுக்கு திடீரென அந்த சர்ப்ரைஸ் வந்து சேர்ந்தது.. இதனால், இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டனர்.

கடந்த வருடம் கோவை மாநகரில் திடீரென ஒரு மாற்றம் தென்பட்டது.. அதாவது, முக்கிய சாலை சந்திப்புகளில் ஆட்டோமேட்டிக் சிக்னல்கள் செயல்பட்டு வருகின்றன.. ஆனால், பாதசாரிகள் இந்த சிக்னலை கடந்து செல்வதற்கு ஏற்ற, பிரத்யேக சிக்னல் என்று எதுவும் கிடையாது.. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனர்...

Madurai Happy news and Excellent Karaoke music played on Road Traffic Signals

நடுரோடு: நடுரோட்டில், வாகனங்களுக்கு மத்தியில்தான் பாதசாரிகளும், சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளது.. அதனால்தான், கோவை காவல்துறையே இதற்கு ஒரு தீர்வை கண்டது.

அதன்படி, சிக்னல்களில் பாதசாரிகளின் பாதுப்பை உறுதி செய்ய, நடவடிக்கை எடுக்கும்படி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிடவும், உடனடியாக சிக்னல்களில் பாதசாரிகள் கடந்து செல்வதற்கு வசதியாக, 'கவுன்ட் டவுன்' சிக்னல் வசதி, பாதுகாப்பான முறையில் கடந்து செல்ல மேம்படுத்தப்பட்ட 'மார்க்கிங்' வசதி, சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு செய்திகளை ஒலிபரப்பும் வசதி, பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர் ஒலிபெருக்கி மூலம், அறிவுரை வழங்கும் வசதி என பல்வேறு வசதிகள் கொண்டுவரப்பட்டன.

இந்த நவீன வசதிகளுடன் கூடிய, புதிய சிக்னல் திறப்பு விழாவும், அப்போது லஷ்மி மில்ஸ் சந்திப்பில் நடந்தது.. பிரபல இசையமைப்பாளர்களின் இன்னிசை கோர்வைகளும் ஒலிபரப்பாகும் என்றும் போலீஸ் அதிகாரிகள் அப்போது கூறியிருந்தனர்.
சென்னை, திருச்சியிலும் இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டு, அதற்கு வரவேற்பு கிடைத்ததையடுத்து மதுரையிலும் கொண்டுவரப்பட்டுள்ளது.

போக்குவரத்து கமிஷனர்: போலீஸ் கமிஷனர் லோகநாதன் போக்குவரத்து துணை கமிஷனர் குமார் ஆகி யோரின் முயற்சியில் கடந்த 28-ந்தேதி முதல் மதுரையில் செயல்பட்டு வருகிறது. மதுரை மாநகரில் உள்ள 32 சிக்னல்களில் கரோக்கி இசை ஒலிபரப்பு செயல்பாட்டில் இருக்கிறது. போக்குவரத்து கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார் வழிகாட்டுதலில், போக்குவரத்து உதவி ஆணையர்கள் செல்வின் மாரியப்பன் ஆகியோரின் மேற்பார்வையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளின் காதில் இனிமையான, கரோக்கி இன்னிசை காதில் விழுகிறது.. வழக்கமாக சிக்னல்கள் வாகன ஓட்டிகள் காத்திருக்க நேரும்போது, கடும் எரிச்சலாவார்கள், டென்ஷன் ஆவார்கள்.. காரணம், அந்த நேரத்தில் அவர்களின் சூழல் அப்படியிருக்கலாம்.

அமைதியான மனநிலை: எனவே, வாகன ஓட்டிகளை அமைதியான மனநிலைக்கு கொண்டு வரும் முயற்சியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிக்னலில் காத்திருக்கும்போது, இனிமையான இசை காதில் விழுந்து, வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சியையும் தந்து வருகிறது.

இடையிடையே, "இரு சக்கர வாகனம் இருவர் செல்வதற்காக மட்டுமே, படியில் பயணம் நொடியில் மரணம், வேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம், ஹெல்மெட் அணிவது அவசியம்" போன்ற விழிப்புணர்வு வாசகங்களும் இடம்பெற்று வருகின்றன.. இந்த புதிய அதிரடிக்கு, வாகன ஓட்டிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

போக்குவரத்து சிக்னல்கள்: குறிப்பாக போக்குவரத்து சிக்னலில் அதிக நேரம் காத்திருக்கும் கோரிப்பாளையம், காள வாசல், ஆரப்பாளையம், தெற்குவாசல், பெரியார் நிலையம், கீழவாசல் சிக்னல்களில் காத்திருப்ப வர்கள் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டதை பெரிதும் வரவேற்று வருகிறார்களாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+