எங்க பசங்களுக்கு இல்லாதது எதுக்கு?.. மாணவர்களுக்காக விடாமல் போராடும் சு.வெங்கடேசன்! நெத்தியடி ஆக்சன்
மதுரை: மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சியை புறக்கணித்த தனியார் வங்கியில் அரசு டெபாசிட் செய்திருந்த பணத்தை திரும்ப பெற வேண்டும் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். எம்.பியின் இக்கருத்துக்கு அமைச்சர் மூர்த்தியும் வரவேற்பளித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெற்ற கல்விக்கடன் மேளாவை குறிப்பிட்ட தனியார் வங்கி புறக்கணித்திருந்த நிலையில், சு.வெங்கடேசன் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து அவர் தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் விவாதம் நடத்தப்பட்டு டெபாசிட்டை திரும்ப பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கல்விக்கடன்
ஆண்டுதோறும் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்காக கல்விக்கடன் வழங்கும் மேளா நடைபெறுவது வழக்கம் கடந்த ஆண்டு ரூ.119.7 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டிலேயே அதிக அளவில் கல்விக்கடன் மதுரையில்தான் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்த மேளாவில் 291 மாணவர்களுக்கு ரூ.18.51 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினரான சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

புறக்கணிப்பு
ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விக்கடன் மேளாவில் பங்கேற்றிருந்த வங்கிகள் கோடி கணக்கில் கல்விக்கடன் வழங்கிய நிலையில், ஒரேயொரு தனியார் வங்கி மட்டும் வெறும் ரூ.38.87 லட்சத்தை கடனாக வழங்கியிருந்தது. இந்நிலையில், தற்போது நடைபெற்ற கல்விக்கடன் மேளாவை அந்த வங்கி புறக்கணித்திருக்கிறது. கல்விக்கடன் கொடுப்பதன் அவசியத்தை மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இவ்வாறு மாணவர்களுக்கு கடன் கொடுக்க முன் வராமல் தனியார் வங்கி புறக்கணித்திருந்ததை பலர் விமர்சித்திருந்தனர்.

கேள்வி
இந்நிலையில், அந்த குறிப்பிட்ட தனியார் வங்கியில் அரசு டெபாசிட் செய்திருந்த பணத்தை வேறு வங்கிக்கு மாற்ற வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில், "எங்கள் மாணவர்களுக்கு கல்விக்கடன் தர மறுக்கும் வங்கிகளில் அரசின் பணம் ஏன் டெபாஸிட் செய்யப்பட வேண்டும்? மதுரை - கல்விக்கடன் மேளாவில் பங்கெடுக்காத தனியார் வங்கியில் அரசு செய்துள்ள டெபாஸிட் தொகையை திரும்பப்பெறுவோம். எரிவதை பிடுங்கினால், கொதிப்பது அடங்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முடிவு
இது தொடர்பாக ஏற்கெனவே நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் விவாதம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் டெபாசிட் தொகையை வேறு வங்கிக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல கல்விக்கடன் மேளாவில் பங்கேற்றிருந்த அமைச்சர் மூர்த்தியும், எம்.பி சு.வெங்கடேசனின் கருத்துக்களுடன் ஒன்றி போனதால் டெபாசிட்டை வேறு ஒரு வங்கிக்கு மாற்றுவது குறித்து எவ்வித ஆட்சேபனையும் மேலெழவில்லை. கல்விக்கடன் வழங்காமல் புறக்கணித்த வங்கியில் அரசு பணத்தை டெபாசிட் செய்ய மாட்டோம் என்று எம்பி ஒருவரே வெளிப்படையாக பேசியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications