திருப்பரங்குன்றம் வழக்கு.. மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல.. தமிழக அரசு வைத்த முக்கிய வாதம்!
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல என்று தமிழக அரசு முக்கிய வாதத்தை முன் வைத்துள்ளது. மலை உச்சியில் தீபத் தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தமிழக அரசு வாதிட்டுள்ள நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு கோயில் நிர்வாகம்தான் அனுமதி அள்க்க வேண்டும் என்றும் தமிழக அரசு வாதிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவகர் சார்பாகவும், மாவட்ட ஆட்சியர் சார்பாகவும் தனித்தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கேகே ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி மறுத்தனர். தொடர்ந்து, பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால், அமைதியாக இருங்கள் என்று நீதிபதிகள் கூறினர். தொடர்ந்து அரசு தரப்பில் வழக்கறிஞர், திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் தான் அனுமதி வழங்க வேண்டும்.
தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்திற்கு அருகில் தர்கா இருக்கிறது. வழக்கமாக தீபம் ஏற்றப்படும் நடைமுறைகளே இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டது. அதேபோல் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல. அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. கடந்த 73 ஆண்டுகளாக உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. 1994ல் இருந்தே பிரச்சனை ஏற்பட்டது. தீபம் ஏற்றுவது தொடர்பாக பொதுநல வழக்கு தால்க்க்கல் செய்யப்பட்டு, 2014ல் விரிவான தீர்ப்புகள் வந்துள்ளன. அதேபோல் மலை உச்சியில் இருப்பது சர்வே தூண் தான். மலையில் நெல்லித்தோப்பு, தர்கா உள்ளிட்டவை தர்காவிற்கு சொந்தமானது. மற்றவை கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானது.
மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரும் மனுவில் உள்நோக்கம் உள்ளது. பிரச்சனை பெரிதாகி இருப்பதால், மக்களின் நலன் கருதி அரசு சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. நிலைமையை சீர்படுத்தவே 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார். மதநல்லிணக்கம் மற்றும் பொது அமைதியை மனதில் வைக்க வேண்டும் என்று வாதங்கள் முன் வைக்கப்பட்டது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications