மாற்றுத் திறனாளிகளுக்கான நிதியை மத்திய அரசு குறைத்தது.. தமிழக அரசு உயர்த்தியது.. சு வெங்கடேசன்!
மதுரை: நடப்பாண்டு பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு நிதியை குறைத்துள்ளதாகவும், தமிழக அரசு தேசிய அளவில் அதிக நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார முகாம் பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பட்டு வருகிறது. 8ம் நாளான நேற்று பாத்திமா கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவம் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், கடந்த 7 நாட்களாக மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள், மத்திய அரசின் நலத்திட்டங்களையும் கொண்டு சேர்த்து வருகிறோம். அனைத்து முகாம்களிலும் பல்வேறு தரப்பு மக்கள் இணைந்துள்ளனர். அனைவரும் சேர்ந்து ஒரு மக்கள் இயக்கமாக நடத்தியுள்ளோம்.

மத்திய அரசு நிதி குறைப்பு
நடப்பாண்டில் தேசிய அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கிய மாநிலம் தமிழ்நாடு தான். இந்த துறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பொறுப்பில் வைத்துள்ளார். நடப்பாண்டில் மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,038 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மறுபக்கம் மத்திய அரசு ரூ.10 கோடியை குறைத்துள்ளது.

சிறப்பு முகாம்
இந்த சிறப்பு முகாம்களை ஏடிஐபி திட்டத்தின் சிறப்பு அனுமதியை பெற்று நடத்தி வருகிறோம். அமைச்சர் மூர்த்தியின் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நடத்தப்படும் மூன்றாவது முகாம் இது. இதன் மூலம் அதிக மாற்றுத்திறனாளிகள் பயனடைந்துள்ளனர். அதேபோல் மாவட்ட நிர்வாகம், அரசியல் கட்சியினர், மாற்றுத் திறனாளிகள் அமைப்புகள் என பலரும் இந்த முகாமிற்காக பணியாற்றி வருகின்றனர்.

அரசு அமைப்புகள்
8 நாட்கள் முகாம் சிறப்பாக நிறைவடைந்துள்ளது. இன்னும் 5 நாட்கள் நடத்திவிட்டால், மதுரையில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசின் நலத்திட்டங்களை நம்மால் கொண்டு சேர்க்க முடியும். இந்த முகாமில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு, பேருந்து பாஸ், ரயில் பாஸ், அலிம்கோவின் உபகரணங்களுக்கான அளவீடு, கடன் தொகை உள்ளிட்ட 24 அரசு அமைப்புகள் இருக்கிறது.

அரசின் நலத்திட்டம்
இதனால் மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமை முடிந்த அளவு முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மதுரை மாவட்டத்தில் அரசின் நலத்திட்டத்தால் பயனடையாத ஒரு மாற்றுத் திறனாளி கூட இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications