கிராம உதவியாளர் தேர்வு.. நள்ளிரவில் கசிந்த வினாத்தாள்.. ரூ.10,000க்கு விற்பனை? மதுரையில் ஒரே பரபரப்பு
மதுரை: மதுரை மாவட்டத்தில் இன்று 209 கிராம உதவியாளர் பதவிக்கான தேர்வு நடைபெறும் நிலையில் வினாத்தாள்கள் நேற்று நள்ளிரவில் சமூக வலைதளங்களில் வெளியானதாக கூறப்படுகிறது. இந்த வினாத்தாளர்கள் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக பரவும் தகவல் பற்றி தீவிர விசாரணை துவங்கி உள்ளது.
தமிழகத்தில் காலியாக அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி சமீபத்தில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் 209 பணி
மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பின்படி மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள 209 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என கூறப்பட்டு இருந்தது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 7 ம் தேதி முதல் ஆன்லைனில் பெறப்பட்டன. மொத்தம் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இன்று தேர்வு
இதையடுத்து கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு இன்று நடைபெற இருந்தது. இதற்காக மாவட்டத்தில் 22 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. காலையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிக்கான எழுத்தறிவு தேர்வு நடைபெற இருந்தது. விண்ணப்பம் செய்தவர்கள் தேர்வுக்கு தயாராகி வந்தனர்.

கசிந்த வினாத்தாள்?
இந்நிலையில் தான் நேற்று நள்ளிரவில் கிராம உதவியாளர் தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாக கூறப்படுகிறது. மதுரை தெற்கு தாலுகா பகுதியில் உள்ள ஆங்கில திறனறி தேர்வுத்தாள்கள் வலைதளங்களில் பரப்பப்பட்டதாகவும் முழுமையான வினாத்தாளர்களை பெற ரூ.10 ஆயிரம் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது

விசாரணைக்கு உத்தரவு
இந்த விவகாரம் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தேர்வுக்கு முன்பாகவே சமூக வலைதளங்களில் வினாத்தாள் வெளியானதை கேட்டு மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது. மேலும் தேர்வு வினாத்தாள் கசிந்தது எப்படி என்பது பற்றி மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை துவங்கினர். அதோடு புதிதாக தயாரிக்கப்பட்ட வினாத்தாளர்கள் மூலம் தேர்வு நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை











Click it and Unblock the Notifications