தென்கிழக்கு அரபிக் கடலில் உருவானது டவ்-தே புயல்; மே 18-ல் குஜராத் அருகே கரையை கடக்கும்
மங்களூர்: தென்கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது டவ்- தே புயலாக இன்று உருவானது. இந்த புயல் மே 18-ந் தேதியன்று குஜராத் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக உருமாறியது. இந்த புயலுக்கு டவ்-தே என ஏற்கனவே பெயரிடப்பட்டுள்ளது.

டவ்-தே புயலின் தாக்கம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டிருந்தது. திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பிற்பகல் முதலே சூறைகாற்றும் இரவில் மழையும் பெய்தது.
கேரளாவின் இடுக்கி. காசர்கோடு, கோழிக்கோடு. வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்திருக்கிறது. இந்த 5 மாவட்டங்களிலும் 5 மாவட்டங்களில் 204 மி மீ மழை பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

கோட்டயம், எர்ணாகுளம், திரிசூர், மலப்புரம், பாலக்காடு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 115 மி.மீ. மழைக்கு வாய்ப்பு உள்ளதாம். டவ்-தே புயல் உருவாகி உள்ளதால் மீனவர்கள் அரபிக் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் புயல் மீட்புப் பணிகளுக்காக 5 மாநிலங்களுக்கு 53 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே கேரளாவில் கனமழை கொட்டி தீர்க்கிறது. இதனால் பல பகுதிகளில் கடல் நீர், மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications