கள்ளக்குறிச்சி சக்தி பள்ளி மாணவர்கள் அரசு & வேறு பள்ளிகளுக்கு மாற்றம்! அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியமூர் சக்தி பள்ளியில் மர்மமான முறையில் மாணவி உயிரிழந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தேவைப்பட்டால் அரசு மற்றும் வேறு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடியாக கூறியுள்ளார்.
தமிழகம முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பள்ளி மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர் மற்றும் செயலாளர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக பள்ளி மாணவியின் மரணம் தொடர்பாக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், பள்ளி சூறையாடப்பட்டதோடு, பள்ளி பேருந்துகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இது தொடர்பாக விடிய விடிய நடந்த சோதனையில் நூற்றுக்கணக்கானோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமைச்சர்கள் ஆய்வு
இதனிடையே கள்ளக்குறிச்சி அருகே கலவரம் நடந்த கனியாமூர் தனியார் பள்ளியில் அமைச்சர்கள் வேலு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி, கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேன், உதயசூரியன், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

அமைச்சர் அன்பில் மகேஷ்
இந்நிலையில் சக்தி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தேவைப்பட்டால் அரசு மற்றும் வேறு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடியாக கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," பள்ளியில் ஏற்பட்டுள்ள சேதாரத்தைப் பார்க்கும்போது, அங்கு இயல்பு நிலைக்குத் திரும்ப, 2 மாதங்களுக்கு மேல் ஆகும் போல தெரிகிறது.

பாதிக்கப்படக்கூடாது
அதுவரை, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களை சேர்க்கைக்கு அனுமதிப்பதற்காக சின்னசேலம் அருகில் இருக்கும் முதன்மைக் கல்வி அலுவலரிடம், அருகில் இருக்கும் அரசுப்பள்ளிகள் என்னென்ன உள்ளதென்று பார்க்கமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
Recommended Video

எதிர்க்கட்சிகள் அரசியல்
மாணவி உயிரிழந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் மாணவியின் மரண விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது சரியானது அல்ல தற்போது மாணவியை இழந்து தவிக்கும் அவரது பெற்றோரின் உணர்வுகளை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்" என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications