"காதலனை" நம்பி தனியாக சென்ற சிறுமி.. 8 கயவர்களால் கூட்டு பலாத்காரம்.. 12 மணி நேரம் நேர்ந்த கொடூரம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 16 வயது சிறுமி ஒருவர் 8 கயவர்களால் 12 மணி நேரம் தொடர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு வசித்து வந்த 16 வயது சிறுமிக்கும் பக்கத்து கிராமத்தில் வசித்து வந்த இளைஞருக்கும் நீண்ட நாட்கள் நட்பு இருந்துள்ளது.

இந்நிலையில் இவர்கள் அடிக்கடி தனியாக சந்தித்து பேசிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்திருக்கிறது. இது தொடர்பாக சிறுமி தன்னுடைய தோழிகளிடத்தில் கூறி இருக்கிறார்.

வெளியே போகலாம்..

வெளியே போகலாம்..

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை எங்காவது வெளியே போகலாம் என்று அந்த இளைஞன் கேட்டுள்ளார். இதற்கு அந்த சிறுமியும் ஒப்புக்கொள்ள இருவரும் கடற்கரைக்கு சென்றிருக்கிறார்கள். பின்னர் அருகில் இருந்த பாழடைந்த கட்டிடத்திற்கு போகலாம் என அந்த இளைஞன் அழைத்துள்ளார். முதலில் சிறுமி இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். பின்னர் அந்த இளைஞன் மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே சிறுமி ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அங்கு இந்த இளைஞரின் நண்பர்கள் இருப்பது சிறுமிக்கு தெரிந்திருக்கவில்லை. எனவே கட்டிடத்திற்குள் சென்றவுடன் சிறுமியை 7 பேர் சூழ்ந்துகொண்டு கட்டிடத்தின் முதல் தளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அது ஆள் ஆரவமற்ற இடம் என்பதால் சிறுமியின் கூச்சல் சத்தம் யார் காதுக்கும் விழவில்லை.

கூட்டு பாலியல் பலாத்காரம்

கூட்டு பாலியல் பலாத்காரம்

இதனையடுத்து சிறுமியை ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளனர். ஆனால் சிறுமி அதற்று இணங்காததால் அந்த கயவர்கள் சிறுமியை பலமாக தாக்கியுள்ளனர். இதில் சிறுமியின் முகத்தில் லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி எவ்வளவு கெஞ்சியும் அவளை அவர்கள் விடவில்லை. நான்கு மணி நேரத்திற்கு பின்னர் அங்கிருந்து வெளியே அனுப்பி விடுவதாக கூறி கடற்கரைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அதற்குள் நள்ளிரவு ஆகிவிட்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்குள்ள புதரில் வைத்து சிறுமியை மீண்டும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

சிக்கல்

சிக்கல்

சிறுமி அங்கேயே மயங்கிய நிலையில் அங்கிருந்து மீண்டும் ஆளில்லாத கட்டிடத்திற்கு தூக்கி சென்றுள்ளனர். அங்கு வைத்து சிறுமியை காலை 8 மணி வரையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மொத்தமாக 12 மணி நேரம் தொடர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு சிறுமி உள்ளாக்கப்பட்ட நிலையில், காலை 11 மணியளவில் அந்த கும்பல் சிறுமியை விட்டுவிட்டு சென்றுவிட்டிருக்கிறது. பின்னர் நீண்ட நேரம் கழித்து அங்கிருந்து தப்பிய சிறுமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்தனர். ஆனால் சிறுமியின் காதலன் தலைமறைவாகிவிட்டதால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

விசாரணை

விசாரணை

பின்னர் தொடர் தேடுதலுக்கு பிறகு குற்றவாளிகள் 8 பேர் ஒவ்வொருவராக பிடிபட்டனர். இவர்கள் மீது போக்சோ, இந்திய தண்டனை சட்டம் 376 (D), 366 (A), 341, 342, 323 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என்று காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். காதலனை நம்பி தனியாக சென்ற சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+