வீடு வீடாக வேக்சின் தந்திருந்தால் பல உயிர்களை காத்திருக்கலாம்.. மத்திய அரசை விளாசிய மும்பை ஹைகோர்ட்
மும்பை: வீடு வீடாக வேக்சின் கொடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தால் பல முதியவர்களின் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என்று மும்பை ஹைகோர்ட் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளது.
இந்தியாவில் ஒரு பக்கம் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் வேக்சின் தேவையும் உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் வேக்சினுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வயது முதிர்ந்தவர்களுக்கு, வீட்டை விட்டு வெளியே வர முடியாத மாற்று திறனாளிகளுக்கு வீட்டிற்க்கே சென்று வேக்சின் கொடுக்க வேண்டும் என்று மும்பை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் த்ருத்தி கப்பாடியா, குணால் திவாரி ஆகியோர் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மும்பை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தீபங்கர் தாத்தா, நீதிபதி எஸ்ஜி குல்கர்னி ஆகியோர் முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்தனர். அதில், மத்திய அரசு முன்பே வீடு வீடாக வேக்சின் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்திருக்க வேண்டும்.
இப்படி செய்திருந்தால் பல முதியவர்கள், பிரபலமானவர்கள், முக்கியஸ்தர்கள், பொது மக்கள் பலியாகி இருக்க மாட்டார்கள். எல்லோராலும் வேக்சின் சென்டர் சென்று வரிசையில் நின்று வேக்சின் பெற்றுக்கொண்டு இருக்க முடியாது.
முதியவர்கள் வேக்சின் பெறுவதற்காக லைனில் நிற்பதை பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. இது தொடர்பாக ஏப்ரல் 22ம் தேதியே மத்திய அரசிடம் விளக்கம் கேட்டோம். ஆனால் மூன்று வாரம் ஆகியும் மத்திய அரசு இதில் பதில் அளிக்கவில்லை.
இது தொடர்பாக மே 19ம் தேதி மத்திய அரசு எங்களிடம் பிரமான பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வயதானவர்களுக்கு வீடு வீடாக ஏன் வேக்சின் கொடுக்கவில்லை என்று விளக்கம் அளிக்க வேண்டும். வெளிநாடுகளில் எல்லாம் இந்த முறையை ஏற்கனவே தொடங்கிவிட்டனர்.
ஆனால் இந்தியாவில் மட்டும் நல்ல திட்டங்கள் வர கால தாமதம் ஆகிறது. வயதானவர்கள் மட்டுமின்றி சாலையில் உள்ள பிச்சைக்காரர்கள், வீடு இல்லாதவர்களுக்கும் எப்படி வேக்சின் கொடுக்கப்படும் என்பதற்கான திட்டங்களை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று மும்பை ஹைகோர்ட் கூறியுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications