குலாம் நபி ஆசாத் சொன்னது சரிதான்.. காங்கிரஸ் மூழ்கும் கப்பல்.. மகாராஷ்டிரா துணை முதல்வர் அட்டாக்!
மும்பை: குலாம் நபி ஆசாத் சொன்னது சரிதான் என்றும்..காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல் என்றும்.. கப்பலை மீட்க முடியாததால் அனைவரும் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர் என்றும் மகாராஷ்டிரா துணை முதல்வரும், அம்மாநில பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்த தேர்தல்களில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால் காங்கிரஸ் கட்சி துவண்டு போயிருக்கும் நிலையில், அக்கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் பலர் விலகி வருவது மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர முகமாக இருந்த ஜோதிர் ஆதித்ய சந்தியா தொடங்கி, கபில் சிபல், அமரிந்தர் சிங், அஸ்வினி குமார் என பல முக்கிய தலைவர்கள் காங்கிரஸில் இருந்து விலகினர்.

குலாம் நபி ஆசாத் விலகல்
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்தும் கட்சியில் இருந்து விலகியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள குலாம் நபி ஆசாத், சமீப காலமாக அக்கட்சியின் தலைமை மீது அதிருப்தியில் இருந்தார். கடந்த 16 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரசின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, கட்சியில் இருந்தும் விலகுவதாக நேற்று அறிவித்தார்.

தேவேந்திர பட்னாவிஸ் கருத்து
குலாம் நபி ஆசாத் காங்கிரசில் இருந்து வெளியேறிய சம்பவம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை வைத்து அக்கட்சியை பாஜக தலைவர்கள் வசைபாட தொடங்கியிருக்கின்றனர். அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வரும், அம்மாநில பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், குலாம் நபி ஆசாத் காங்கிரசில் இருந்து விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

கப்பலை மீட்க முடியாது
நாக்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ''காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல். கப்பலை மீட்க முடியாது என்று நினைப்பவர்கள் அக்கட்சியில் இருந்து வெளியேற தொடங்கிவிட்டனர். குலாம் நபி ஆசாத் எழுப்பிய கேள்விகள் மிகவும் முக்கியமானவை என்றே நான் நினைக்கிறேன். எப்படியிருந்தாலும் அது காங்கிரசின் உள்கட்சி விவகாரம். நான் இதில் பதிலளிக்கப்போவது இல்லை'' என்றார்.

விதிகளின் படி நடைபெறும்
சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி- சம்பாஜி பிரிகடே கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது குறித்து தேவேந்திர பட்னாவிசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பட்னாவிஸ், ''ஒருவருக்கு வீழ்ச்சி தொடங்கும் போது அவர் அறிவுப்பூர்வமாக சிந்திப்பதிலும் தோல்வி அடைந்து விடுவார்'' என்றார். தசரா பண்டிகை நெருங்கும் நிலையில், சிவசேனாவின் இரு அணிகளும் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கும் என்று தகவல் வெளியாகி வரும் நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த தேவேந்திர பட்னாவிஸ், 'விதிப்படி அனைத்தும் நடைபெறும். விதிகளை மீறும் வகையில் ஏதேனும் கோரிக்கை வந்தால் அதை அரசு ஏற்காது' என்றார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications