நாட்டிலேயே முதல்முறை.. சிகரெட், பீடி சில்லறை விற்பனைக்கு மகாராஷ்ராவில் தடை.. பின்னணி!
மும்பை: நாட்டிலேயே முதல்முறையாக சிகரெட், பீடி சில்லறை விற்பனைக்கு மகாராஷ்டிராவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி அங்கு சிகரெட் மற்றும் பீடியை மொத்தமாக மட்டுமே வாங்க முடியும்.
ஒரு சிகரெட், இரண்டு சிகரெட் என இனி யாரும் வாங்க முடியாது. இதனால் புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்து அம்மாநில அரசு அதிரடியான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சில்லறையில் சிகரெட்டுகள் மற்றும் பீடிஸ் விற்பனையை தடை செய்த நாட்டின் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா மாறி உள்ளது. அம்மாநில பொது சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
லூடோ விளையாட்டில் ஏமாத்திட்டாரு.. அப்பா என அழைக்க பிடிக்கவில்லை.. கோர்ட்டுக்கு வந்த மகள்
மகாராஷ்டிரா அரசு
சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களின் பிரிவு 7 (விளம்பரம் மற்றும் வர்த்தக மற்றும் வர்த்தக உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்துதல்) சட்டம், 2003, ஒற்றை சிகரெட் மற்றும் பீடிகளை விற்பனை செய்வதற்கு அரசு முழு தடை விதிக்கிறது. இந்த உத்தரவை சுகாதார முதன்மை செயலாளர் டாக்டர் பிரதீப் வியாஸ் பிறப்பித்துள்ளார்.
சில்லறை விற்பனை
சில்லறை விற்பனையில் சிகரெட்டுகள் பாக்கெட் இல்லாமல் விற்கப்பட்டதால் தடை செய்யப்பட்டுள்ளது, புகைபிடித்தால் புற்றுநோய்கள் வருகின்றன.இதய நோய்களும் வருகின்றன. எனவே புகைப்பழக்கத்தின் தீங்குகளைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு தடை விதித்துள்ளது.
புகைபழக்கம் குறையும்
டாடா மெமோரியல் மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பங்கஜ் சதுர்வேதி, இந்த தடைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். புதிய உத்தரவு இளைஞர்களிடையே புகை பழக்கத்தை குறைக்க உதவும் என்று கூறினார். இந்தியாவில் புகை பிடிக்கும் தொற்றுநோய் 16 முதல் 17 வயதுடைய இளைஞர்களை தான் அதிகம் ஈர்க்கிறது. முழு பாக்கெட்டை வாங்க நிதி ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் ஒன்றிரண்டு என சில்லறையில் சிகரெட்டுகளை வாங்குகிறார்கள். அத்துடன் சில்லறையில் சிகரெட்டுகளை வாங்கிய பெரியவர்கள் ஒருபோதும் புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்படும் அதிக வரிகளை உணர்ந்ததில்லை.
உணருவதில்லை
ஆண்டுக்கு 10% வரி உயர்வு புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையில் 8% வீழ்ச்சியை விளைவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் ஒரு சிகரெட்டை வாங்க மக்கள் அனுமதிக்கப்பட்டால், அதிக வரிகளின் விளைவை அவர்கள் உணர மாட்டார்கள். இப்போதைய தடை புகைப்பழக்கத்தை குறைக்க உதவும் "என்றுகூறினார். உலகளாவிய புகையிலை இளைஞர் கணக்கெடுப்பு 2016 இன் படி, மகாராஷ்டிரா நாட்டில் மிகக் குறைந்த புகைபிடித்தல் விகிதத்தைக் கொண்டிருக்கிறது.