மகாராஷ்டிரா எம்.எல்.சி. தேர்தல்- பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு- ஆட்டத்தை ஆட தயாராகும் காங்.
மும்பை: மகாராஷ்டிரா எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் 4 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனை முன்வைத்து பாஜக அதிருப்தியாளர்களுக்கு எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சீட் வழங்கலாம் என்பதால் அம்மாநில அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா முதல்வரான உத்தவ் தாக்கரே பதவி ஏற்ற போது எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி. பதவி வகிக்கவில்லை. அவர் பதவி ஏற்ற 6 மாதங்களுக்குள் (மே 27-ந் தேதிக்குள்) எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி. யாக தேர்வாக வேண்டும்.
மகாராஷ்டிராவில் மார்ச் மாதம் எம்.எல்.சி. தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது. இந்த நிலையில் உத்தவ் தாக்கரே எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி. ஆகாத நிலையில் அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் முதல்வராக பதவி ஏற்றாக வேண்டும் என்கிற நெருக்கடி ஏற்பட்டது.

அமைச்சரவை பரிந்துரை
இதனால் மகாராஷ்டிரா சட்ட மேலவையான எம்.எல்.சி.க்கு உத்தவ் தாக்கரேவை நியமன எம்.எல்.சி.யாக ஆளுநர் நியமிக்க வேண்டும் என்று அம்மாநில அமைச்சரவை பரிந்துரைத்தது. ஆனாலும் ஆளுநர் கோஷ்யாரி இதை கண்டுகொள்ளவில்லை. இதனால் பிரதமர் மோடியை தொடர்பு கொண்ட உத்தவ் தாக்கரே, அரசியல் சாசன நெருக்கடி குறித்து விவரித்தார். இதனையடுத்து உடனடியாகா எம்.எல்.சி. தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை ஆளுநர் கோஷ்யாரி கேட்டுக் கொண்டார்.

மே 21-ல் எம்.எல்.சி. தேர்தல்
இதனை தேர்தல் ஆணையம் ஏற்று வரும் 21-ந் தேதி எம்.எல்.சி. தேர்தல் நடைபெறும் என அறிவித்திருக்கிறது. சிவசேனாவின் சார்பில் உத்தவ் தாக்கரே மற்றும் நீலம் கோரே ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நீலம் கோரே மீண்டும் எம்.எல்.சி.யாகிறார்.

4 பாஜக வேட்பாளர்கள்
இந்த நிலையில் பாஜக இன்று தமது 4 வேட்பாளர்களை அறிவித்தது. பாஜகவின் நாக்பூர் தலைவர் பிரவின் தட்கே, கோபிசந்த் பாதல்கர், அஜித் கோப்சதே மற்றும் ரஞ்சித்சிங் மொகித் பாட்டீல் ஆகியோர் பாஜகவின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே பாஜகவின் அதிருப்தி தலைவரான ஏக்நாத் கட்சே, எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிட விரும்பியிருந்தார். ஆனால் அவரது பெயர் இன்றைய பட்டியலில் இடம்பெறவில்லை.

காங். ஆட்டம் ஆரம்பம்
இதனை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்துள்ளதாக மும்பை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது பாஜகவின் அதிருப்தி தலைவரான ஏக்நாத் கட்சே அல்லது பங்கஜா முண்டே இருவரில் ஒருவரை தங்களது கோட்டாவில் எம்.எல்.சி. வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் பாஜகவில் குழப்பம் உருவாகும் என்பது காங்கிரஸின் நிலைப்பாடு.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications