மகாராஷ்டிரா அரசியல்! 2 மாதங்களுக்கு முன்பே உளவு துறை கொடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்? கோட்டைவிட்ட தாக்ரே
மும்பை: மகாராஷ்டிராவில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தைக் கணிக்கத் தவறிய உளவுத் துறை மீது கேள்விகள் எழுந்துள்ளன.
Recommended Video
மகாராஷ்டிராவில் இருக்கும் மகா விகாஸ் அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாகவே அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
அமைதியாக இருந்த மகாராஷ்டிர அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியவர் சிவசேனா மூத்த தலைவரும் மகாராஷ்டிரா பொதுப் பணித்துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே!

பலன் இல்லை
முதலில் தனது ஆதரவாளர்கள் உடன் அவர் சூரத்தில் தங்கி இருந்தார். அதன் பின்னர் இப்போது அசாம் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சிவசேனா மீது தனக்கு எவ்வித கோபமும் இல்லை எனத் தெரிவித்துள்ள ஏக்நாத் ஷிண்டே, என்சிபி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் தான் தனக்குப் பிரச்சினை உள்ளதாகத் தெரிவித்தார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் பலன் தரவில்லை.

ஆலோசனை
முதலில் தனது ஆதரவாளர்கள் உடன் அவர் சூரத்தில் தங்கி இருந்தார். அதன் பின்னர் இப்போது அசாம் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சிவசேனா மீது தனக்கு எவ்வித கோபமும் இல்லை எனத் தெரிவித்துள்ள ஏக்நாத் ஷிண்டே, என்சிபி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் தான் தனக்குப் பிரச்சினை உள்ளதாகத் தெரிவித்தார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் பலன் தரவில்லை.

ஆலோசனை
இந்தச் சூழலில் சிவசேனா சார்பில் மாலை எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளாத எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர முதல்வர் பொறுப்பில் இருந்து தாக்ரே ராஜினாமா செய்யக் கூடும் என்று கூறப்படும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

சரத் பவார்
மகாராஷ்டிராவில் திடீரென இப்படியொரு அரசியல் குழப்பம் ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இன்று கூட்டணியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்திலும் கூட சரத் பவார் இது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். தனது அதிருப்தியை வெளிப்படையாகக் காட்டிய பவார், இந்த விவகாரம் குறித்தும் உளவுத்துறை ஏன் எச்சரிக்கையைக் கொடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

இரு மாதங்கள்
இது மகாராஷ்டிராவின் அரசியல் தலைவர்களை உன்னிப்பாகக் கண்காணிக்கும் மாநில உளவுத் துறையின் திறன் மீதான கேள்வியை எழுப்பும் வகையில் இருக்கிறது. உளவுத் துறை இந்த நெருக்கடியை முன்கூட்டியே அறியத் தவறிவிட்டதாகவும் பலரும் சாடினர். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து இரு மாதங்களுக்கு முன்னரே ரிப்போர்ட் கொடுக்கப்பட்டதாக மகாராஷ்டிரா போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் தரப்பு
ஏக்நாத் ஷிண்டே உட்பட 8 முதல் 10 எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் உடன் தொடர்பில் இருப்பதாக உளவுத் துறை தனது அறிக்கையில் கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. உளவுத்துறை அதிகாரிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு அரசுக்கு இந்த ரகசிய அறிக்கை அளித்துள்ளனர். இருந்த போதிலும், அரசு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்துள்ளது.

உளவு துறை
மகாராஷ்டிராவின் அரசியல் மாற்றங்களைக் கண்காணிக்கும் மாநில உளவுத் துறை, மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள், பயங்கரவாதம் மற்றும் மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ரிப்போர்ட் கொடுக்கும். பெரும்பாலும் அரசியல் மாற்றங்கள் குறித்த ரிபோர்ட்டுகள் அரசு உயர் அதிகாரிகளுக்கு வாய்மொழியாகவே கொடுக்கப்படும் என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சொல்ல முடியாது
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "அத்தகைய சூழ்நிலையில், உளவுத் துறை உதவியுடன், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும் வாய்மொழியாகவே இதுபோன்ற தகவல்கள் கொடுக்கப்படும் என்பதால், யாரிடம் இதைத் தெரிவித்தார்கள். எப்போது தெரிவித்தார்கள் என்பது குறித்த தகவல்கள் துல்லியமாகத் தெரியவில்லை" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications