தொடரும் ரமணா பாணி.. பெற்ற தாய் உயிருடன் இருக்கிறார் என பொய் கூறி ரூ.285 கோடியை சுருட்ட முயன்ற மகன்
மும்பை: மும்பையில் ரூ. 285 கோடி சொத்துகளை சுருட்டுவதற்காக உயிரிழந்த தாய் உயிருடன் இருக்கிறார் என கூறி ஏமாற்றிய அண்ணன் மீது தம்பி புகார் அளித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்தவர் கம்லேஷ் ராணி. இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி உயிரிழந்தார். இவருக்கு ரூ. 285 கோடி சொத்துகள் இருந்தன. அத்துடன் நொய்டாவில் மெழுகுவர்த்தி தயாரிக்கும் ஆலையும் இருந்தது.
இறப்பதற்கு முன்னர் ராணி தனது உயிலில் தனது சொத்துகளை மகன்கள் சமமாக பிரித்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அவர் இறந்தவுடன் அவரது மூத்த மகன் சுனில் குப்தா , அவரது மனைவி ராதா, மகன், அபிஷேக் ஆகியோர் சொத்துகளை தாங்களே எடுத்து கொள்ள நினைத்தனர்.

உயிருடன்
இதையடுத்து நொய்டா மெழுகு ஆலையை தன் பெயரில் தாய் எழுதிக் கொடுத்துவிட்டதாக சுனில் பொய்யாக ஒரு சான்றை தயார் செய்து அதை மும்பை பத்திரபதிவு அலுவலகத்தில் கொடுத்துவிட்டார். அப்போது தாய் உயிருடன் இருப்பதாகவே குறிப்பிட்டுள்ளார்.

அடியாட்கள்
அது போல் தாய் இறந்த ஒரே வாரத்தில் தனது தம்பி விஜய் குப்தாவுக்கு தெரியாமல் ரூ. 29 கோடி பணத்தை சுருட்டியுள்ளார். இதுகுறித்து விஜய் குப்தா, சுனிலிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சுனிலோ அடியாட்களை கொண்டு கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்.

விஜய் புகார்
இதனால் பொறுத்திருந்த விஜய், இப்படியே போனால் ரூ. 285 கோடி சொத்தையும் சுனில் அபேஸ் செய்துவிடுவார் என கருதிய விஜய் அவர் மீது போலீஸில் புகார் செய்தார்.

அதிர்ச்சி
இதையடுத்து விசாரணையில் விஜய் கூறியது உண்மை என அறிந்த போலீஸார், சுனில், அவரது மனைவி, மகன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். தாய் இறந்ததை மறைத்து பொய்யான ஆவணங்களை உருவாக்கி ரூ.285 கோடி சொத்துகளை மனைவி, மகனுடன் சுருட்ட முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications