அதிர்ச்சியா... எனக்கா.. மாநிலங்களவை தேர்தல் முடிவில் ட்விஸ்ட் வைத்த ஷரத் பவார்...!
மும்பை: மகாராஷ்டிரா மாநில மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியளிக்கவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ஷரத் பவார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 10-ல் தேர்தல் நடக்கும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதில் தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் 41 இடங்களுக்கான உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர். இதையடுத்து, மீதமுள்ள 16 இடங்களுக்கு போட்டி இருந்ததால் ஹரியானா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது

வாக்குப்பதிவில் குழப்பம்
காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், அந்தந்த மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்வமாக வாக்களித்தனர். அதில், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் ஏராளமான எம்எல்ஏ-க்கள் கட்சி மாறி வாக்களித்திருந்தனர். இதனால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. முக்கியமாக மகாராஷ்டிராவில் சிவசேனாவும், எதிர்க்கட்சியான பாஜகவும் தேர்தல் ஆணையத்தில் தேர்தலை ரத்து செய்யக்கோரின. இதனால் வாக்குப்பதிவு முடிவடைந்து, வாக்குகளை எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டது.

மகாராஷ்டிராவில் அதிர்ச்சி முடிவு
இறுதியாக 8 மணி நேரம் தாமதமாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பாஜகவைச் சேர்ந்த மூன்று வேட்பாளர்களான தனஞ்சே மகாதிக், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் முன்னாள் அமைச்சர் அனில் போண்டே ஆகியோர் வெற்றிபெற்றனர். அதேபோல் சிவசேனா கட்சியில் இருந்து சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபூல் படேல் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இம்ரான் பிரதாப்காதி ஆகியோர் வெற்றிபெற்றனர்.

தேர்வு முடிவு பற்றி ஷரத் பவார்
இதுகுறித்து பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார், இந்தத் தேர்தல் முடிவுகள் எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. எங்கள் கூட்டணியின் மூன்று வேட்பாளர்களுக்கும் அவர்களுக்கு என்ன வாக்குகள் வர வேண்டி இருந்ததோ அது வந்து சேர்ந்தது. ஆனால் எங்கள் கட்சியில் வெற்றிபெற்ற பிரபூல் படேலுக்கு ஒரு வாக்கு கூடுதலாக வந்தது. அது எங்கிருந்து வந்தது என்று எனக்கு தெரியும். அவர் ஏற்கனவே என்னுடன் பணியாற்றியவர் என்று கூறி ட்விஸ்ட் வைத்து சென்றார்.

பாஜக வெற்றிக்கு காரணம் என்ன?
மகாராஷ்டிராவில் பாஜகவைச் சேர்ந்த 3 வேட்பாளர்கள் வெற்றிபெற்றதற்கு, அம்மாநில சுயேட்சை எம்எல்ஏ-க்களின் ஆதரவே காரணமாக பார்க்கப்படுகிறது. பாஜக தரப்பில் அதிகளவிலான சுயேட்சைகளை ஈர்த்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு மூன்றாவது மாநிலங்களவை உறுப்பினரை வெற்றிபெற வைத்தது மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications