கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவி செய்தவர்..நடிகர் சோனு சூட் மீது வழக்குப்பதிவு..எதற்கு தெரியுமா?
மும்பை: குடியிருப்பு கட்டிடத்தை அனுமதியின்றி ஹோட்டலாக மாற்றியது தொடர்பாக நடிகர் சோனு சூட் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த புகாரை சோனு சூட் மறுத்துள்ளார். குடியிருப்பு கட்டிடத்தை ஹோட்டலாக மாற்றியதில் எந்த விதிமீறலும் இல்லை. இது தொடர்பாக மாநகராட்சியின் ஒப்புதலை ஏற்கனவே பெற்றுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது புகாருக்கு உள்ளாகி இருக்கும் இந்த ஹோட்டலில்தான் கொரோனா காலத்தில் ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்த மக்கள் மற்றும் மருத்துவர்களை சோனு சூட் தங்கவைத்து உதவி புரிந்தது குறிப்பிடத்தக்கது.

போலீசார் வழக்குப்பதிவு
மஹாராஷ்டிரா மாநிலம் ஜூஹூ பகுதியில் 'லவ் அண்ட் லட்' என்ற பெயரில் பாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான 6 மாடி கட்டிடம் அமைந்துள்ளது. குடியிருப்பு வளாகமாக அமைந்திருந்த இந்த கட்டிடத்தை சோனு சூட் தற்போது ஹோட்டலாக மாற்றியுள்ளார். ஆனால் இதற்கு முறையான அனுமதி பெறவில்லை என மும்பை மாநகராட்சி போலீசில் புகார் அளித்தது. அதன் பேரில் சோனு சூட் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எந்த விதிமீறலும் இல்லை
நான் எப்போதும் சட்டத்திற்குக் கட்டுப்படுகிறேன். கொரோனா தொற்றின்போது மக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தங்க வைக்க இந்த ஹோட்டல் பயன்படுத்தப்பட்டது. குடியிருப்பு கட்டிடத்தை ஹோட்டலாக மாற்றியதில் எந்த விதிமீறலும் இல்லை. இது தொடர்பாக மாநகராட்சியின் ஒப்புதலை ஏற்கனவே பெற்றுவிட்டேன்.

வழக்கு தொடருவேன்
இதற்காக கடலோர மேலாண்மைத்துறையின் அனுமதியை கேட்டுள்ளேன். ஆனால் கொரோனா காரணமாக அது தாமதமாகி உள்ளது. மும்பை மாநகராட்சியின் புகாருக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன் என்று சோனு சூட் கூறியுள்ளார்.

மக்களுக்கு உதவி செய்தவர்
கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டன. தங்கள் ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை சோனு சூட் தனது சொந்த செலவில் ஊருக்கு அனுப்பி வைத்தார். மேலும், கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்தார். தற்போது புகாருக்கு உள்ளாகி இருக்கும் இந்த ஹோட்டலில்தான் ஊருக்குச் செல்ல முடியாமல் பரிதவித்த மக்கள் மற்றும் மருத்துவர்களை சோனு சூட் தங்கவைத்து உதவி புரிந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications