Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓமிக்ரான் அச்சம்: மும்பையில் இன்றும், நாளையும் 144 தடை

Subscribe to Oneindia Tamil

மும்பை : மகராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஓமிக்ரான் அச்சத்தால் மும்பையில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

மகாராஷ்டிர மாநிலத்தில் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்ததை அடுத்து மும்பை மாநகரில் டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் தொற்று மேலும் பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து ஊர்வலங்கள், பேரணிகள், சமுதாய நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Section 144 Mumbai Omicron Maharashtra maximum cases

ஓமிக்ரான் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. B1.1 529 எனும் புதிய வகை கொரோனா நவம்பர் 25ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கொரோனாவில் இருந்து 30க்கும் அதிகமான முறை மரபியல் மாற்றமடைந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஓமிக்ரான் தொற்று இதுவரை 59 நாடுகளுக்குப் பரவி உள்ளதாகவும், மற்ற நாடுகளைப் பாதிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்ததை அடுத்து மும்பை மாநகரில் டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஓமிக்ரான் அச்சத்தால் மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து ஊர்வலங்கள், பேரணிகள், சமுதாய நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Section 144 Mumbai Omicron Maharashtra maximum cases

மகராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே 13 பேருக்கு ஓமிக்ரான் தொற்று இருந்த நிலையில் நேற்று மட்டும் 3 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கூடுதலாக 3 வயது குழந்தைக்கும் உருமாறிய தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதியதாக தொற்று ஏற்பட்டவர்கள் பிம்ப்ரி சிந்தவாத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதியதாக தொற்று ஏற்பட்டவர்கள் முறையே 48, 25 மற்றும் 37 வயதுடையவர்கள். இவர்கள் தான்சானியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தற்போதைய நிலவரப்படி 32 பேருக்கு ஓமிக்ரான தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 17, ராஜஸ்தானில் 9, குஜராதில் 3, கர்நாடகாவில் 2 மற்றும் டெல்லியில் ஒரு நபருக்கு புதிய உருமாறிய கொரோனாவான ஓமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+