Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரத்பவார் என்சிபியில் பாகப் பிரிவினை: அஜித் பவார்- மகாராஷ்டிரா ; சுப்ரியா சுலே - தேசிய அரசியல்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சரத்பவார் நேற்று அறிவித்த நிலையில் அக்கட்சியின் அடுத்த தலைமை தொடர்பாக தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்திய அரசியலின் முதுபெரும் தலைவர்களில் ஒருவர் சரத் பவார். என்சிபி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார் சரத்பவார். அவரது ராஜினாமா முடிவை என்சிபி தொண்டர்கள் இன்னமும் ஏற்க முடியாதவர்களாக தவித்து வருகின்றனர். சரத்பவாருக்கு ரத்தத்தில் கடிதம் எழுதி தங்களது முடிவை வாபஸ் பெற வலியுறுத்தி வருகின்றனர்.

Sharad Pawar Stepped down: Supriya Sule to lead NCPs national role?

அதேநேரத்தில் என்சிபி கட்சியில் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பாக தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. என்சிபியைப் பொறுத்தவரையில் அதன் தொடக்க காலத்தில் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவார்தான் அடுத்த வாரிசாக இருந்து வந்தார். திடீரென சரத்பவார் மகள், சுப்ரியா சுலேவை கட்சிக்குள் திணித்தார். சுப்ரியாவும் 3 லோக்சபா தேர்தல்களில் வெற்றி பெற்று அக்கட்சியின் டெல்லி முகமாக இருந்து வருகிறார். ஆகையால் தற்போது அஜித் பவார், சுப்ரியா சுலே இடையே மட்டுமே புதிய தலைமைக்கான போட்டி நிலவுகிறது.

அஜித் பவாரைப் பொறுத்தவரையில் மகாராஷ்டிரா அரசியலில் அத்தனையும் எதிர்கொள்ளக் கூடியவர். தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கே துரோகம் செய்துவிட்டு பாஜகவுடன் இணைந்தவர். பின்னர் மீண்டும் எந்தவித தயக்கமும் இல்லாமல் என்சிபிக்கு ஓடிவந்தவர். இப்போதும் கூட ஒட்டுமொத்த கட்சியையே அவர் கபளீகரம் செய்து சிவசேனாவைப் போல பாஜகவிடம் ஒப்படைத்துவிடுவாரோ என்கிற அச்சம் உண்டு. அதனாலேயே சரத்பவார், கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார் என்கிற கருத்தும் கூட முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் புதிய தலைமை மாற்றத்தை சுமூகமாக மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது டெல்லி அரசியல்- தேசிய அரசியலை சுப்ரியா சுலேவும் மாநில அரசியலை அஜித் பவாரும் பார்த்துக் கொள்வது என்பதாக ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் இந்த அதிகாரப் பகிர்வு என்பது எப்படி எத்தனை காலத்துக்கு நீடிக்கக் கூடியதாகவும் இருக்கும் என்பதும் ஒரு கேள்வி. ஏற்கனவே டெல்லியில் ஒரு பிரளயம் ஏற்படப் போகிறது என சுப்ரியா சுலே கூறியிருந்தார். அந்த பிரளயம் என்ன என்பது தெரியாத நிலையில் அடுத்த சில நாட்களில் என்சிபி தொடர்பான குழப்பங்களுக்கு விடை கிடைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக என்சிபி கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் பிரஃபுல் படேல் கூறியதாவது: சரத்பவார் நேற்று தெளிவாக தனது முடிவை அறிவித்துவிட்டார். அடுத்த தலைமுறை கட்சியை வழிநடத்தட்டும் என சரத்பவார் விரும்பி இருக்கலாம். அவரது ராஜினாமா முடிவு எங்கள் யாருக்கும் முன்னமே தெரியாது. இன்று கூட அஜித் பவார், சுப்ரியா சுலே, நான், பூஜ்பால் என பலரும் அவரிடம் பேச முயற்சித்தோம். அவர் தமது முடிவை மறுபரிசீலனை செய்ய 2 அல்லது 3 நாட்கள் எடுத்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளோம். தற்போதைய நிலையில் நான் அகில இந்திய துணைத் தலைவர் பதவியில் இருக்கிறேன். அதற்காக அகில இந்திய தலைவர் பொறுப்பை ஏற்க நான் தயாராக இல்லை. என்சிபியில் எந்த பிளவும் இப்போதைக்கு இல்லை; அனைத்து தலைவர்களும் தொண்டர்களும் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+