ரகசிய திருமணம் நடந்து 10 நாட்களில் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் கைது.. நடந்தது என்ன?
மும்பை: சக நடிகை புகாரின் பேரில் திருமணமான 10 நாட்களில் நடிகை ராக்கி சாவந்த் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக அறியப்படுபவர் ராக்கி சாவந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர். இவர் ஏற்கெனவே கடந்த 2019 ஆம் ஆண்டு தொழிலதிபர் ரித்தேஷ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதனை பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே ராக்கி சாவந்த் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

அடில் துரானி
இந்த நிலையில் அடில் துரானி என்பவருடன் டேட்டிங் செய்து வந்தார் ராக்கி சாவந்த். இவருடைய தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனால் திடீரென கடந்த 10 நாட்களுக்கு முன்பு காதலனை கரம் பிடித்தார் ராக்கி சாவந்த். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

10 நாட்கள்
இந்த நிலையில் திருமணமான 10 நாட்களில் ராக்கி சாவந்த் கைது செய்யப்பட்டுள்ளார். பாலிவுட் நடிகையான ஷெர்லின் சோப்ரா மும்பையில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு புகாரை கொடுத்துள்ளார். அந்த புகாரில், ராக்கி சாவந்த் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் பரப்பி வருவதாக ஷெர்லின் குற்றம்சாட்டியிருந்தார்.

ராக்கி சாவந்த் மீது வழக்குப் பதிவு
இந்த புகாரின் பேரில் போலீஸார் ராக்கி சாவந்த் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராக்கி சாவந்தை கைசு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆபாசமாக நடிகை ஷெர்லினின் படத்தை சித்தரித்தது பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடிலிடம் இருந்து தன்னை பிரிக்க சதி
இதுகுறித்து ராக்கி சாவந்த் கூறுகையில் அடிலுடன் இருந்து தன்னை பிரிப்பதற்காக இது போன்றதொரு பொய்யான தகவலை கூறியுள்ளார்கள். மைசூரிலிருந்து யாரோ சிலர் இது போல் செய்வதாக ராக்கி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். நடிகை ராக்கி சாவந்திற்கும் நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து மோதல் இருந்து வருகிறது.

ஷெர்லின் சோப்ராவுக்கும் ராக்கிக்கும் மோதல்
ஒருவர் மீது ஒருவர் போலீஸில் புகார் செய்து வருகிறார்கள். இருவரும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி குற்றம்சாட்டி கொள்கிறார்கள். ராக்கி சாவந்த் தனது மியூசிக் அகாதெமியை திறக்க நேற்று திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் கைது செய்யப்பட்டுவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பே திருமணம் செய்து கொண்ட போதிலும் இப்போதுதான் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications