குடிநீர், உணவு, மின்சாரம் இல்லை.. டெல்டா மாவட்டங்களில் வலுக்கும் மக்கள் போராட்டம்
நாகை: கஜா புயல் கோரத்தாண்டவத்தால் ஆங்காங்கே குடிநீர், உணவு, மின்சாரம் இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வங்கக் கடலில் உருவான கஜா புயல் நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்தது. இதனால் டெல்டா மாவட்டங்களில் 120 கி.மீ. தூரத்துக்கு காற்று வீசியது.
இதைத் தொடர்ந்து நாகை, வேதாரண்யம், திருவாரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் சாலைகளிலும் தெருக்களிலும் முறிந்து விழுந்தன.

50 ஆயிரத்துக்கும் மேல்
தென்னை, வாழை, கரும்பு, வெற்றிலை உள்ளிட்ட பயிர்களும் சேதமாகின. சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் விழுந்ததால் டெல்டா மாவட்டங்களில் கிராம பகுதிகள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளன.

தஞ்சம்
நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் சுமார் 90 ஆயிரம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது குடிநீர், உணவு, மின்சாரம் எதுவுமே கிடைக்காததால் கிராம மக்கள் அதிகளவில் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

போராட்டம்
தற்போது இவர்களுக்கு நாகை, வேதாரண்யம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், விழுந்தமாவடி, திருவோணம், மன்னார்குடி ஆகிய பகுதிகளில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திணறல்
தனி தீவுபோல் காட்சியளிக்கும் வேதாரண்யத்தில் இன்று வரை எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. இதனால் குடிநீர், அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் திணறி வருகின்றனர்.

தாக்குதல்
நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் மக்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே சில கிராமங்களில் அதிகாரியை முற்றுகையிடுவதும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் நிகழ்கிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications