நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும்.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
நாகை: உலக பொருளாதாரம் வேகமாக முன்னேறி கொண்டிருக்கும் சூழலில், அதே வேகத்தில் நாமும் முன்னேற வேண்டும் என்றும், அதற்கு இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
Recommended Video
நாகையில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக கலையரங்கில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதேபோல் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், பல்கலைக்கழக்கத்தின் துணைவேந்தர் முனைவர் கோ. சுகுமார் மீன்வள பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 12 மாணவர்களுக்கு முனைவர் பட்டங்களும், 240 மாணவர்களுக்கு இளநிலை மற்றும் முதுநிலை மீன்வள அறிவியல் பட்டங்களும், 55 மாணவர்களுக்கு இளநிலை தொழில்நுட்ப பட்டங்களும் மாணவ மாணவியர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழங்கினார். பின்னர் பட்டங்களை பெற்ற மாணவர்கள் ஆளுநர் வாசிக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், உலக பொருளாதாரம் வேகமாக முன்னேறி கொண்டு இருக்கும் சூழலில், அதே வேகத்தில் இந்திய மாணவர்களும் முன்னேற வேண்டும். சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்துள்ளோம், அடுத்த 25 ஆண்டுகளில் இதைவிட வேகமாக உழைக்க வேண்டும்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் பொறுப்பேற்க வேண்டும். அதற்கு மாறுபட்ட புதிய சிந்தனைகளை உருவாக்கி நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல இளைஞர்கள் முன்வர வேண்டும். இளைஞர்கள் யோசிப்பதில் கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்க வேண்டும். ஏனென்றால் இப்பொழுது உள்ள உலகத்திற்கு வித்தியாசமாக தான் தேவைப்படுகிறது.
மேலும், பொருளாதாரத்தில் மீன்வளத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. மகளிர் மேம்பாடு, தொழிற்துறை , உட்கட்டமைப்பு உள்ளிட்டவைகளில் தமிழ்நாடு இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications