நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும்.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
நாகை: உலக பொருளாதாரம் வேகமாக முன்னேறி கொண்டிருக்கும் சூழலில், அதே வேகத்தில் நாமும் முன்னேற வேண்டும் என்றும், அதற்கு இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
Recommended Video
நாகையில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக கலையரங்கில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதேபோல் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், பல்கலைக்கழக்கத்தின் துணைவேந்தர் முனைவர் கோ. சுகுமார் மீன்வள பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 12 மாணவர்களுக்கு முனைவர் பட்டங்களும், 240 மாணவர்களுக்கு இளநிலை மற்றும் முதுநிலை மீன்வள அறிவியல் பட்டங்களும், 55 மாணவர்களுக்கு இளநிலை தொழில்நுட்ப பட்டங்களும் மாணவ மாணவியர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழங்கினார். பின்னர் பட்டங்களை பெற்ற மாணவர்கள் ஆளுநர் வாசிக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், உலக பொருளாதாரம் வேகமாக முன்னேறி கொண்டு இருக்கும் சூழலில், அதே வேகத்தில் இந்திய மாணவர்களும் முன்னேற வேண்டும். சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்துள்ளோம், அடுத்த 25 ஆண்டுகளில் இதைவிட வேகமாக உழைக்க வேண்டும்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் பொறுப்பேற்க வேண்டும். அதற்கு மாறுபட்ட புதிய சிந்தனைகளை உருவாக்கி நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல இளைஞர்கள் முன்வர வேண்டும். இளைஞர்கள் யோசிப்பதில் கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்க வேண்டும். ஏனென்றால் இப்பொழுது உள்ள உலகத்திற்கு வித்தியாசமாக தான் தேவைப்படுகிறது.
மேலும், பொருளாதாரத்தில் மீன்வளத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. மகளிர் மேம்பாடு, தொழிற்துறை , உட்கட்டமைப்பு உள்ளிட்டவைகளில் தமிழ்நாடு இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications