"ஆபாசம்".. கிளாஸ் நடத்தும் போதே அத்துமீறிய ஆசிரியர்? பாய்ந்து வந்த புகார்! அப்படி என்ன சொன்னாங்க?
நாகர்கோவில்: சமீபத்தில் வகுப்பறையில் ஆபாச பாடம் நடத்தியதாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் மாணவிகள் சிலர் ஆபாச கடிதம் எழுதியதை கண்டித்த நிலையில் ஆசிரியர் மீது பழிசுமத்தும் விதத்தில் மாணவிகள் இவ்வாறு கூறியுள்ளதாக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மற்றும் அரசியல் கட்சிகளின் தலையீடு காரணமாக இந்த பிரச்னை திசை திருப்பப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

புகார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1500 மாணவ/மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்கவுண்டன்சி பாடம் எடுக்கும் ஆசிரியர் மாணவ/மாணவியர்களுக்கு ஆபாச பாடம் நடத்தியதாக குற்றச்சாட்டு மேலெழுந்தது. இது குறித்து மாணவர்கள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கைது
புகாரை தொடர்ந்து கடந்த 6ம் தேதி பள்ளியின் தலைமையாசிரியர் அறையை பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். ஆனால் இந்த சம்பவம் குறித்து எந்தநடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடத்தில் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். புகாரையடுத்து ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

குற்றச்சாட்டு
ஆனால் இந்த பிரச்னை குறித்து ஆசிரியர்கள் மாற்றுக் கருத்து கூறி வருகின்றனர். மாணவிகள் தவறு செய்ததாகவும், அதனை கண்டித்த காரணத்தால் இதுபோன்ற பொய் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு குமரி மாவட்ட அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதாவது மாணவிகள் ஆபாச பாடல் எழுதியதாகவும், அதனை கண்டித்த ஆசிரியர் மாணவிகளின் பெற்றோரை அழைத்துவர வற்புறுத்தியதாகவும் இதனை தவிர்க்கவே இது போன்ற பொய் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

கோரிக்கை மனு
மேலும், புகார் குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் ஆசிரியரை கைது செய்துள்ளதாக ஆசிரியர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை மனுவையும் அளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மாணவிகளின் தவறை கண்டித்து அவர்களின் பெற்றோர்களை அழைத்து வர சொன்ன நிலையில் மாணவிகள் இந்த பிரச்னையை திசை திருப்ப பொய்யான புகாரை அளித்துள்ளனர். மேலும் வெளியிலிருந்து சில கட்சிகளின் தலையீடு காரணமாகவும் இந்த பிரச்னை திசை திருப்பப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளனர்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications