"ஆபாசம்".. கிளாஸ் நடத்தும் போதே அத்துமீறிய ஆசிரியர்? பாய்ந்து வந்த புகார்! அப்படி என்ன சொன்னாங்க?
நாகர்கோவில்: சமீபத்தில் வகுப்பறையில் ஆபாச பாடம் நடத்தியதாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் மாணவிகள் சிலர் ஆபாச கடிதம் எழுதியதை கண்டித்த நிலையில் ஆசிரியர் மீது பழிசுமத்தும் விதத்தில் மாணவிகள் இவ்வாறு கூறியுள்ளதாக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மற்றும் அரசியல் கட்சிகளின் தலையீடு காரணமாக இந்த பிரச்னை திசை திருப்பப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

புகார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1500 மாணவ/மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்கவுண்டன்சி பாடம் எடுக்கும் ஆசிரியர் மாணவ/மாணவியர்களுக்கு ஆபாச பாடம் நடத்தியதாக குற்றச்சாட்டு மேலெழுந்தது. இது குறித்து மாணவர்கள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கைது
புகாரை தொடர்ந்து கடந்த 6ம் தேதி பள்ளியின் தலைமையாசிரியர் அறையை பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். ஆனால் இந்த சம்பவம் குறித்து எந்தநடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடத்தில் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். புகாரையடுத்து ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

குற்றச்சாட்டு
ஆனால் இந்த பிரச்னை குறித்து ஆசிரியர்கள் மாற்றுக் கருத்து கூறி வருகின்றனர். மாணவிகள் தவறு செய்ததாகவும், அதனை கண்டித்த காரணத்தால் இதுபோன்ற பொய் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு குமரி மாவட்ட அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதாவது மாணவிகள் ஆபாச பாடல் எழுதியதாகவும், அதனை கண்டித்த ஆசிரியர் மாணவிகளின் பெற்றோரை அழைத்துவர வற்புறுத்தியதாகவும் இதனை தவிர்க்கவே இது போன்ற பொய் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

கோரிக்கை மனு
மேலும், புகார் குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் ஆசிரியரை கைது செய்துள்ளதாக ஆசிரியர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை மனுவையும் அளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மாணவிகளின் தவறை கண்டித்து அவர்களின் பெற்றோர்களை அழைத்து வர சொன்ன நிலையில் மாணவிகள் இந்த பிரச்னையை திசை திருப்ப பொய்யான புகாரை அளித்துள்ளனர். மேலும் வெளியிலிருந்து சில கட்சிகளின் தலையீடு காரணமாகவும் இந்த பிரச்னை திசை திருப்பப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications