Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்க இலக்கிய விழாவில் கத்தி குத்து- ஒரு கண் பார்வையை இழந்த சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் இலக்கிய விழாவில் ஒன்று சரமாரியாக கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின்( வயது 75) ஒரு கண் பார்வை பறிபோயிருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் மும்பையில் பிறந்தவர் சல்மான் ருஷ்டி. 1981-ம் ஆண்டு புக்கர் பரிசு பெற்றார்.1988-ல் சல்மான் ருஷ்டி எழுதிய சாத்தானின் வசனங்கள் புத்தகம், இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து சல்மான் ருஷ்டிக்கு எதிராக ஈரான் மத தலைவர் அயதுல்லா கொமேனி, மரண தண்டனை விதித்து பத்வா ஆர்டர் பிறப்பித்திருந்தார்.

இந்தப் புத்தகத்துக்கு இந்தியாவும் தடை விதித்தது. பின்னர் பிரிட்டன் அரசின் பாதுகாப்புடன் சில காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார் ருஷ்டி

15 இடங்களில் கத்தி குத்து

15 இடங்களில் கத்தி குத்து

இந்நிலையில் அமெரிக்காவிவின் நியூயார்க் மாகாணத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் இலக்கிய விழா ஒன்றில் சல்மான் ருஷ்டி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹாதி மாடர் என்ற இளைஞர், சல்மான் ருஷ்டியை சரமாரியாக கத்தியால் குத்தினார். மேடையிலேயே இந்த கத்தி குத்து சம்பவம் நிகழ்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சல்மான் ருஷ்டியின் உடலில் மொத்தம் 15 இடங்களில் கத்தி குத்தி விழுந்தது. இக்கத்தி குத்தி சம்பவத்தில் ஈடுபட்ட ஹாதி மாடர், நியூஜெர்சியை சேர்ந்தவர். அவர் கைது செய்யப்பட்டார்.

கண், கழுத்தில் கடும் காயம்

கண், கழுத்தில் கடும் காயம்

இத்தாக்குதலில் சல்மான் ருஷ்டியின் கண், கழுத்து பகுதிகளில் கடுமையாக காயம் ஏற்பட்டது. இதனால் சல்மான் ருஷ்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதே சல்மான் ருஷ்டியின் கண்பார்வை பறிபோகும் அச்சம் இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

கண்பார்வை பறிபோனது

கண்பார்வை பறிபோனது


தற்போது சல்மான் ருஷ்டியின் ஒரு கண் பார்வை பறிபோயிருக்கிறது; ஒரு கை செயல் இழந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பெனின்சுலேவியா மருத்துவமனையில்தான் ருஷ்டி சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சல்மான் ருஷ்டியின் கல்லீரலும் சேதமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சல்மானுக்கு பிரிட்டன் கவுரவம்

சல்மானுக்கு பிரிட்டன் கவுரவம்

சல்மான் ருஷ்டியின் புத்தகத்தை சாத்தானின் வசனங்கள் நூலை மொழிபெயர்த்தவர் 1991-ம் ஆண்டில் கொல்லப்பட்டார். இதுவரை மொத்தம் 14 நாவல்களைப் படைத்துள்ளார் ருஷ்டி. 2007-ம் ஆண்டு இலக்கிய சேவைக்காக பிரிட்டன் மகாராணியால் சிறப்பிக்கப்பட்டவர் சல்மான் ருஷ்டி. 2007-ல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய திருவிழாவில் சல்மான் ருஷ்டி பங்கேற்பதாக இருந்தது பெரும் சர்ச்சையானதால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+