ரஷ்யா போன இம்ரான் கான்.. பாகிஸ்தான் வங்கிக்கு பல கோடி அபராதம்.. ஊமை குத்தாக குத்தி விட்ட அமெரிக்கா
நியூயார்க்: உக்ரைன் ரஷ்யா போர் நடைபெற்றுவரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ரஷ்யா சென்றார். இந்நிலையில், பாகிஸ்தான் வங்கிக்கு 55 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இருந்து பிரிந்து வந்து உக்ரைன் தனி நாடானது. தன்னை ஐரோப்பிய நாடாக கருதிய உக்ரைன், நேட்டோ நாடுகளில் இணைய விரும்பியது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது.
நேட்டோ நாடுகளின் சபையில் உக்ரைன் இணைந்தால் மேற்கில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிக்கும், இதனால் ரஷ்யாவுக்கு ஆபத்தாகும் என கருதியது.

இம்ரான் கான்
ரஷ்யாவில் போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ரஷ்யாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். விமான நிலையத்தில் தன்னை வரவேற்க வந்த ரஷ்ய அதிகாரி ஒருவரிடம் இம்ரான் கான் "என்ன ஒரு நேரத்தில் நான் வந்துள்ளேன். மிகவும் கிளர்ச்சியூட்டுகிறது" என்று கூறினார். இந்த உரையாடலின் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதனால் இம்ரான் கானுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அமெரிக்கா
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மாஸ்கோ பயணத்திற்கு அமெரிக்கா பதிலளித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு ஆட்சேபனை தெரிவிப்பது ஒவ்வொரு "பொறுப்பான" நாட்டின் கடமையாகும் என பாகிஸ்தான் பிரதமரை இந்த போர் விவகாரத்தில் அமெரிக்கா சாடியுள்ளது. மேலும் உக்ரைன் ரஷ்யா போரில் அமெரிக்காவின் நிலைப்பாட்டையும் பாகிஸ்தானிடம் அமெரிக்கா தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அபராதம்
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. 23 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் ரஷ்யா சென்றிருக்கிறார். ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தானின் மறைமுக ஆதரவாகவே இதை நேட்டோ நாடுகள் கருதுகின்றன. இந்நிலையில் நியூயார்க்கில் இருக்கும் 'நேஷனல் பேங்க் ஆப் பாகிஸ்தான்' (பால்கிஸ்தான் தேசிய வங்கி) கிளைக்கு அமெரிக்க நிறுவனங்கள் 55 மில்லியன் அமெரிக்க டாலரை அபராதமாக விதித்துள்ளன.

நியூயார்க்
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 20.4 மில்லியன் அமெரிக்க டாலரும் மற்றும் நியூயார்க் மாநிலத்தின் நிதிச் சேவைகளின் கண்காணிப்பு அமைப்பு 35 மில்லியன் அமெரிக்க டாலரை பாகிஸ்தான் தேசிய வங்கிக்கு இந்த அபராதமாக விதித்துள்ளன. வங்கி சட்டத்தை மீறியதற்காகவும் வங்கி ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க 10 நாட்களுக்குள் ஒரு அலுவலரை நியமிக்க வேண்டும் என்றும், 60 நாட்களுக்குள் இந்த அபராதத்தைக் கட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications