தாய்ப்பால் தந்த பெண்.. ஆக்ரோஷமாக கத்திய "முடியில்லாத" பூனை.. நடுவானில் பரபரப்பு
பூனைக்கு தாய்ப்பால் தந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது
நியூயார்க்: விமானத்தில் பெண் ஒருவர் தாய்ப்பால் கொடுக்க போய், கடைசியில் அந்த விவகாரம், விமான தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தரும்வரை சென்றுவிட்டது..!
அமெரிக்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. டெல்டா விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று நியூயார்க் மாகாணத்தின் சைராகியூஸ் நகரிலிருந்து, ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவிற்கு சென்று கொண்டிருந்துள்ளது.
அதில் ஏராளமான பயணிகள் உட்கார்ந்திருந்தனர்.. அப்போது பெண் பயணி ஒருவர், திடீரென தான் துணியில் மூடி வைத்திருந்த செல்லப்பிராணியான பூனைக்கு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்துள்ளார்..

பயந்துவிட்டனர்
இதனால் அந்த பூனை திடீரென கத்த தொடங்கி உள்ளது.. நேரம் ஆக ஆக பூனையின் சத்தம் அதிகரித்தது.. ஒருகட்டத்தில் ஆக்ரோஷமாக கத்த ஆரம்பிக்கவும், சக பயணிகள் பயந்துவிட்டனர்.. அதனால் தாய்பால் கொடுக்க வேண்டாம் என்று அந்த பெண்ணிடம் சொல்லி உள்ளனர்.

பூனை
தன்னுடைய செல்ல பிராணி என்பதால் தாய்ப்பால் தராமல் இருக்க முடியாது என்று அவர்களிடம் வாதம் செய்துள்ளார்.. இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த பயணிகள், விமான ஊழியர்களிடம் புகார் சொன்னார்கள்.. அவர்களும் வந்து, தாய்ப்பால் தர வேண்டாம் என்று கூறியுள்ளனர்.. அவர்கள் பேச்சையும் இந்த பெண் காதில் வாங்காமல் இருந்துள்ளார்.

தரைக்கட்டுப்பாட்டு பிரிவு
இதனால் கடைசியில் விமானத்தை ஓட்டி கொண்டிருந்த பைலட்களிடம் சென்று புகார் சொல்லப்பட்டது.. அதற்கு பிறகு விமானிகள், தரைக்கட்டுப்பாட்டு பிரிவினரிடம் தகவல் பரிமாற்றம் மூலம் புகார் தந்துள்ளனர்.. இவ்வளவும் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோதே நடந்துள்ளது.. இறுதியில் அட்லாண்டா ஏர்போர்ட்டுக்கு ஃபிளைட் வந்து சேர்ந்தது..

பரபரப்பு
அப்போது ஏற்கனவே தயாராக காத்து கொண்டிருந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பெண்ணை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.. அப்போதுதான் தெரிந்தது, அந்த பூனைக்கு முடியே இல்லையாம்.. ஒரு துணியால் போர்த்தி சுற்றிவைத்து கொண்டிருந்திருக்கிறார்.. தன்னுடைய குழந்தையாகவே அந்த பூனையை அவர் பாவித்து வந்துள்ளார் என்று அந்த ஃபிளைட்டில் இருந்தவர்கள் சொல்கிறார்கள்.. ஒரு பூனைக்காக நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications