மிக கன மழை, மண் சரிவுக்கு வாய்ப்பு.. மீட்பு பணிக்கு 3025 பேர் குவிப்பு.. உஷார் நிலையில் நீலகிரி
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நாளை மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், 3025 பேர் மீட்பு பணி மேற்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பிரிய சாகு தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலர் மற்றும் வனத்துறை செயலாளருமான சுப்ரியா சாகு மாவட்டத்திலுள்ள அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கன மழை எச்சரிக்கை
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் இதுவரை எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறியவர், நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருப்பதால் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மண் சரிவு
283 இடங்கள் மாவட்டத்தில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது அப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 450 முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், மண்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டால் அதை சரி செய்ய தேவையான இயந்திரங்கள் இருப்பதாகவும் , அணைகளில் தற்போது 70 சதவீதம் அளவிற்கு தண்ணீர் நிரம்பி வருவதாகவும் அதை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுப்ரியா சாகு தெரிவித்தார். தேவைகேற்ப மீட்பு பணிகள் மேற்கொள்ள பேரிடர் மீட்பு குழு அளிக்கப்படும் என்றார்.

விமானங்கள்
வெள்ள நீரால் சென்னை ஏற்கனவே தத்தளித்து வரும் நிலையில், இன்று பெய்து வரும் கனமழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக சென்னையில் 8 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தரைப்பாலம்
இதனிடையே, விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வண்டிப்பாளையத்தில் பக்கிங்ஹாம் கால்வாயின் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. வண்டிப்பாளையம் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் நடுக்குப்பம், கோட்டிக்குளம் உள்ளிட்ட 10 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications