கூடலூர் ஷாக்.. ஆற்றில் ஒதுங்கிய சடலம்.. மீட்க சென்ற வீரர்.. காத்திருந்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. அதை மீட்கச் சென்ற போது அங்கிருந்த தீயணைப்பு வீரர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பல மணி நேர போராட்டத்திற்கு பின் உடலை மீட்டனர்.

மீட்கப்பட்ட உடல், தீயணைப்பு வீரர் பாலாவின் தந்தை ராமசாமி என்பது அப்போது தான் தெரியவந்தது. தந்தையின் சடலத்தைக் கண்டு தீயணைப்பு வீரர் கதறி அழுதார்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த கோலிபாலப்பகுதியில் வாழ்ந்தவர் ராமசாமி. இவர் அண்மையில் வெளியூருக்கு போய் வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார்.

உடல் மீட்பு

உடல் மீட்பு

இந்நிலையில், கோலிபாலப்பகுதியில் உள்ள புன்னங்குள ஆற்றில் சடலம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராட்டத்திற்குப் பின்னர் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

கதறி அழுதார்

கதறி அழுதார்

அப்போது இறந்தவர் சடலத்தை பார்த்து யார் இவர் என்று விசாரணை செய்து கொண்டிருந்த போது, தீயணைப்பு வீரர் பாலா, இவர் தனது தந்தை ராமசாமி என்று கதறி அழத்தொடங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தீயணைப்பு வீரர்கள் பாலாவிற்கு ஆறுதல் கூறி அழைத்துச் சென்றனர்.

சோகத்தில் கிராமம்

சோகத்தில் கிராமம்

பின்னர் போலிஸார் ராமசாமியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். வெளியூர் செல்வதாக கூறிச் சென்றவர் எப்படி ஆற்றில் விழுந்து உயிரிழந்தார் என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த சம்பவம் நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த கோலிபாலம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயி பலி

விவசாயி பலி

கோவை நரசிபுரம் விராலியூர் கிராமத்தில் யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது.குறிப்பாக ஒற்றை யானைகள் மனிதர்களை கண்டால் விடுவதில்லை. இந்த நிலையில் வனத்துறையினர் அதிகாலை நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

காவல் பணி

காவல் பணி

இப்படியிருக்க கோவை நரசிபுரம் அருகிலுள்ள விராலியூர் கிராமத்தில் யானை தாக்கி விவசாயி சின்னச்சாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இவர் நேற்று இரவு ஆட்டுக்காரன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள தனது தோட்டத்தில் காவல் பணியில் இருந்த போது இன்று அதிகாலை அங்கு வந்த ஒற்றை யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+