சுடுகாட்டில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை.. அழுகுரல் கேட்டு ஓடிய பெண்கள்.. அப்புறம் நடந்தது என்ன?
பாட்னா: பீகார் மாநிலத்தில் சுடுகாட்டில் அழுகுரல் கேட்ட நிலையில் விறகு சேகரித்த பெண்கள் பேய் என அலறியடித்து ஓடிய நிலையில் கிராம மக்களுடன் திரும்பி வந்து பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று காத்திருந்தது.
பீகார் மாநிலம் பாட்னா அருகே சரண் மாவட்டம் உள்ளது. இங்குள்ள கோப்பா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மர்ஹா நதி ஓடுகிறது.
இந்த நதியோரம் சுடுகாடு ஒன்று உள்ளது. இதன் அருகே ஏராளமானவர்கள் விறகு சேகரிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அழுகுரல் கேட்டு பேய் என ஓட்டம்
அதன்படி சம்பவத்தன்று சில பெண்கள் விறகு சேகரித்து கொண்டிருந்தனர். அப்போது சுடுகாட்டில் இருந்து அழுகுரல் ஒன்று கேட்டது. பேய் குரல் என நினைத்த அந்த பெண்கள் விறகை போட்டுவிட்டு அருகே உள்ள கிராமத்துக்கு ஓடினர். அங்கு நடந்த சம்பவம் குறித்து அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து சம்பவ இடத்துக்கு சென்றனர்.

குழந்தை மீட்பு
அப்போதும் அழுகுரல் கேட்டது. சத்தம் கேட்கும் திசையை நோக்கி சென்ற மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது குழந்தை ஒன்று உயிருடன் புதைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மண்ணை கிராம மக்கள் அகற்றி பார்த்தனர். அப்போது 3 வயது குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டு இருந்ததும், குழந்தையின் வாயை களிமண்ணால் மூடியிருந்தது தெரியவந்தது.

மருத்துவமனையில் சிகிச்சை
உடனடியாக அவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர். முதற்கட்ட விசாரணையில் குழந்தையின் பெயர் லாலி என்பதும்ம், அவர்களின் பெற்றோர் பெயர் ராஜூ ஷர்மா-ரேகா என்பதும் தெரியவந்தது.

குடும்பத்தினரை தேடும் போலீஸ்
மேலும் குழந்தையை அவரது தாய் ரேகாவும், அவரது தாயும் சேர்ந்து உயிருடன் புதைத்தது தெரியவந்தது. இந்த வேளையில் குழந்தை அழுததால் வாயை களிமண் கொண்டு அடைத்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இருப்பினும் குழந்தையை எதற்காக அவர்கள் உயிருடன் புதைத்தனர் என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி குழந்தையின் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications