பீகாரில் பரபர- நவ.3 இடைத்தேர்தலுக்குப் பின் லாலு, நிதிஷ் கட்சிகள் ஆர்ஜேடி,ஜேடியூ ஒன்றாக இணையும்?
பாட்னா: பீகார் மாநிலத்தில் நவம்பர் 3-ந் தேதி நடைபெறும் இரு சட்டசபை தொகுதிகளின் முடிவுகள் அம்மாநில அரசியலில் மிகப் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என்கின்றன ஊடக செய்திகள்.
பீகாரில் நிதிஷ்குமாரின் ஜேடியூ, லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி, இடதுசாரிகள், காங்கிரஸ் இணைந்து மெகா கூட்டணி அரசாங்கத்தை அமைத்துள்ளன. அதாவது பாஜகவுக்கு எதிராக பெரும்பாலன எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளன.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு இது முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் பாஜக, அதிமுக அல்லாத எதிர்க்கட்சிகள் திமுக தலைமையில் ஓரணியில் நிற்கின்றன. இதே பார்முலாதான் பீகாரில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நிதிஷின் ஜேடியூ நிலைமை
முன்னதாக பாஜகவுடன் ஜேடியூ கூட்டணி அமைத்திருந்தது. என்னதான் கூட்டணி கட்சி என்றாலும் ஜேடியூவை மெல்ல மெல்ல கரைத்து குழிபறித்து அதன் வலிமையை குறைத்தது பாஜக. இதனால் பீகாரில் ஜேடியூ கட்சியானது ஆர்ஜேடி, பாஜகவுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில்தான் இருக்கிறது. இதனாலேயே பாஜகவை காலத்துக்கும் எழுந்திருக்க விடாமல் செய்ய ஜேடியூவை ஆர்ஜேடியுடன் இணைக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. இது தொடர்பான விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

பீகார் அரசியல் களம்
பீகாரில் தம்முடைய கட்சியின் தலைவராக இருந்த சரத்யாதவை நிதிஷ்குமார் வெளியேற்றி இருந்தார். இதனால் சரத்யாதவ் தனிக் கட்சி தொடங்கினார். ஆனால் அதே சரத் யாதவை அண்மையில் டெல்லியில் நிதிஷ்குமார் ஆரத் தழுவி வரவேற்றார். இதனால் பீகார் அரசியலில் எதுவும் எப்போதும் சாத்தியம் என்ற நிலைதான் உள்ளது.

நவம்பர் 3 இடைத்தேர்தல்
இந்நிலையில்தான் நவம்பர் 3-ந் தேதி பீகாரில் மொகாமா, கோபால்கஞ்ச் ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த இரு தொகுதிகளிலுமே லாலுவின் ஆர்ஜேடி கட்சி வேட்பாளர்களை இறக்கி உள்ளது. ஆர்ஜேடி வேட்பாளர்களுக்கு எந்த வித சலசலப்பும் இல்லாமல் அத்தனை கட்சிகளும் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்துள்ளன.

எதிர்பார்ப்பு- என்ன நடக்கும்?
அதாவது பாஜக அல்லாத அத்தனை கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை ஆதரிக்கின்றன. ஆகையால் இந்த 2 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பாஜகவை வீழ்த்தி அமோக வெற்றியை அத்தனை கட்சிகளும் இணைந்த கூட்டணி வென்றுவிட்டால் நிச்சயம் பீகாரிலும் சரி தேசிய அரசியலிலும் சரி திருப்பங்கள் நடைபெறலாம் என கணிக்கப்படுகின்றன. இதன் முதல் கட்டமாக லாலு- நிதிஷ் கட்சிகள் இணைந்தாலும் ஆச்சரியமில்லை என கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications