பீகார் தேர்தலில் ஜேடியு - ஆர்ஜேடி இடையே நீயா நானா போட்டி - மாறும் அரசியல் வானிலை
பீகார் சட்டசபை தேர்தல் ஜக்கிய ஜனதா தளம் - பாஜக கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணி 120 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய மகா கூட்டணி 115 இடங்களிலும் முன்னிலை வகிக்க்கின்றன.
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றப்போவது யார் என்று ஆளும் ஜேடியு தலைமையிலான கூட்டணிக்கும் எதிர்கட்சியான ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணிக்கும் இடையே நீயா நானா போட்டி நிலவுகிறது. தற்போதைய நிலவரப்படி ஜக்கிய ஜனதா தளம் - பாஜக கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணி 120 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய மகா கூட்டணி 115 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
வாக்கு எண்ணிக்கை காலையில் ஆர்ஜேடி கூட்டணி முன்னிலை வகித்த நிலையில் அதன்பிறகு நிலைமை மாறியது. பாஜக கூட்டணி முன்னிலை வகித்தது. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களான 122 தொகுதிகளையும் விட அதிக இடங்களில் ஜேடியு கூட்டணி முன்னணி வகித்தது.

ஜேடியு - ஆர்ஜேடி இடையே 1000 வாக்குகள் வித்தியாசத்தில் 31 தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது. 101 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கும், ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இங்கு வாக்கு வித்தியாசங்கள் 5000 என்கிற அளவில் உள்ளதால் நொடிக்கு நொடி பரபரப்பு நிலவுகிறது.
183 இடங்களில் வாக்கு வித்தியாசத்தை பார்க்கும் போது 10 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது. 228 தொகுதிகளில் 20ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசம் உள்ளது. பீகார் சட்டசபைத் தேர்தலைப் பொருத்தவரை எந்த நிமிடத்திலும் எதுவும் நடக்கலாம் அரசியல் வானிலை எப்படி வேண்டுமானாலும் மாறாலாம் என்பதால் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில் பீகார் சட்டசபை தேர்தல் ஜக்கிய ஜனதா தளம் - பாஜக கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணி 120 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய மகா கூட்டணி 115 இடங்களிலும் முன்னிலை வகிக்க்கின்றன. ஏஐஎம்ஐஎம் கட்சி 5 இடங்களிலும், பிஎஸ்பி ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
பீகார் சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றப்போவது யார் என்று ஆளும் ஜேடியு தலைமையிலான கூட்டணிக்கும் எதிர்கட்சியான ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணிக்கும் இடையே நீயா நானா போட்டி நிலவுகிறது. முடிவுகள் தெரியவர நள்ளிரவாகிவிடும் என்பதால் இன்றைக்கு பீகார் மாநிலத்தில் அரசியல் கட்சித்தலைவர்களுக்கு சிவராத்திரியாகத்தான் இருக்கப் போகிறது.
ஆளும் கட்சி, எதிர்கட்சி தவிர தேர்தலில் வெல்லும் சுயேச்சைகள், ஓரிரு இடங்களில் வெல்லப்போகும் கட்சிகளுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் கிடைக்கப் போகிறது என்பது உறுதி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications