பீகார் அமைச்சரவையில் குடும்ப அரசியல்.. 10 அமைச்சர்களின் பகீர் பின்னணி.. லிஸ்ட் வெளியிட்ட தேஜஸ்வி
பாட்னா: நாடே உற்று கவனித்த பீகார் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. புதிதாக பதவியேற்றுள்ள பீகார் அமைச்சரவை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பீகார் அமைச்சரவையில் உள்ள 10 பேர் வாரிசு மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அடிப்படையில் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஆர்ஜேடி கட்சி தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
பீகார் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. நிதிஷ்குமார் - பாஜக கூட்டணி ஒரு பக்கமும், தேஜஸ்வி யாதவ் - காங்கிரஸ் கூட்டணி மறுமுனையிலும் போட்டியிட்டனர். தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிசோரும் களத்தில் இருந்தார். கடந்த வாரம் வெளியான தேர்தல் முடிவுகளில் நிதிஷ் - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி பிரம்மாண்ட வெற்றியுடன் ஆட்சியை தக்க வைத்துள்ளனர்.

பீகார் தேர்தல்
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்தது தேசியளவில் பேசு பொருளானது. காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், "வாக்காளர் பட்டியல் எஸ்ஐஆர் பணி மூலம் 66 லட்சம் வாக்காளர்களை நீக்கி முறைகேடு செய்துள்ளனர். அதனால் தான் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது." என்று குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இதற்கு நிதிஷ் - பாஜக கூட்டணி, "ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணியில் குடும்ப அரசியல் நிலவுகிறது. இதனை மக்கள் விரும்பவில்லை. லல்லு பிரசாத் யாதவின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் இடையே ஏற்பட்ட சகோதர யுத்தம், குடும்ப அரசியலை மக்கள் ரசிக்கவில்லை. அதன் காரணமாக தான் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்துள்ளனர்." என்று பதிலடி கொடுத்தனர்.
அமைச்சரவையில் குடும்ப அரசியல்
இந்நிலையில் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் நேற்று பதவியேற்றார். அவருடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்று கொண்டனர். பாட்னாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்நிலையில் எங்களை குடும்ப அரசியல் என்று விமர்சித்துவிட்டு, புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 10 பேர் வாரிசு மற்றும் குடும்ப உறவுகள் அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ஆர்ஜேடி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், "குடும்ப அரசியலில் இருந்து விலகி பீகாரை புதிய உயரத்திற்கு அழைத்து செல்வோம் என்றனர். அவர்களின் அமைச்சரவையிலேயே குடும்ப உறுப்பினர்களின் தாக்கம் இருக்கிறது. முன்னாள் துணை முதல்வர் சந்தோஷ் சுமன் மான்ஜி, சாம்ரத் செளத்ரி, அசோக் சௌத்ரி ஆகியோரின் குடும்ப உறவுகளுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
10 வாரிசுகள்
முன்னாள் அமைச்சர் உபேந்திரா குஸ்வா மகன் தீபக் பிரகாஷ் அமைச்சராக பதவியேற்றுள்ளார். முன்னாள் அமைச்சர் மஹ்வீர் சௌத்ரி மகன் அசோக் சௌத்ரியும் அமைச்சராகியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய் நாராயன் நிஷாத் மருமகள் ராமா நிஷாத் அமைச்சரவையில் உள்ளார். ராமா நிஷாத் கணவர் முன்னாள் எம்பி அஜய் நிஷாத் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல முன்னாள் எம்எல்ஏக்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்பட அமைச்சரவையில் உள்ள 10 பேர் வாரிசு இடம் பெற்றுள்ளனர்." என்று கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications