பியூட்டி பார்லரில் பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர்.. மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பு
பியூட்டி பார்லர் பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர் கட்சிக்குள் சேர்க்கப்பட்டார்.
பெரம்பலூர்: பெண்ணை எட்டி உதைத்து, கழுத்தை நெறித்த திமுக பிரமுகரை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரத்தில் சத்யா என்பவர் பல ஆண்டுகளாகவே லேடீஸ் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் கடந்த செப்டம்பர் மாதம், திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் என்பவர் திடீரென நுழைந்தார்.
கடையினுள் இருந்த சத்யாவை பலமாக தாக்கினார். பிறகு அவரது கழுத்தை பிடித்து கீழே தள்ளியதுடன் தனது கால்களாலும் எட்டி எட்டி உதைத்தார். வலி தாங்க முடியாமல் சத்யா கதறினார்.

தற்காலிக நீக்கம்
இப்படி திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் தனது காலால் சந்தியாவின் வயிற்றில் எட்டி உதைத்து தாக்கும் காட்சி அங்கிருந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகி இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. வாட்ஸ்அப்பிலும் இந்த வீடியோ காட்சி வைரலாக பரவியது. இதனையடுத்து ஒரு பக்கம் போலீசார் செல்வக்குமாரை கைது செய்தாலும், மறு பக்கம், செல்வகுமாரை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் என திமுக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது.

முரசொலி அறிவிப்பு
இந்த நிலையில், செல்வகுமார் மீண்டும் தி.மு.கவில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுகவின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியிலும் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மன்னிப்பு கடிதம்
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செல்வகுமார், பியூட்டி பார்லர் சம்பவம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்ததாகவும். அதனால்தான் அவரை மீண்டும் கட்யில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சலசலப்பு
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் சில மாதங்களிலேயே கட்சியில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications