புதுச்சேரியில் பா.ஜ.க.வுக்கு முதல் ராஜ்யசபா எம்.பி.. செல்வகணபதி போட்டியின்றி தேர்வு!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில் பா.ஜ.க வேட்பாளா் செல்வகணபதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் நடத்தும் அதிகாரி முனுசாமியுடம் இருந்து அவர் சான்றிதழை பெற்றுக்கொண்டர். செல்வகணபதி தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு அக்டோபர் 4-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது.

செல்வகணபதி தேர்வு
சுயேச்சைகள் 5 பேரும், பாஜக வேட்பாளா் ஒருவரும் என 6 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். எம்.எல்.ஏ.க்கள் யாரும் முன் மொழியாததால், சுயேச்சைகள் 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பா.ஜ.க வேட்பாளா் செல்வகணபதியின் வேட்புமனு மட்டும் ஏற்கப்பட்டது.
புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக வேட்பாளர் செல்வகணபதி போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் நடத்தும் அதிகாரி முனுசாமி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தார்.

முதல் முறையாக..
இதனை தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி முனுசாமியிடம் செல்வகண்பதி பெற்றார். இதன்மூலம் புதுச்சேரியில் முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பா.ஜ.க.வைச் சோ்ந்தவா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தூக்கி நிறுத்துவேன்
இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய செல்வகணபதி கூறுகையில், 'எம்..பி.யாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பாலமாக இருந்து புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு பாடுபடுவேன். மாநிலத்தை தூக்கி நிறுத்துவேன்' என்று கூறினார். இந்த நிலையில் செல்வகணபதி தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜே.பி.நட்டா வாழ்த்து
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ' வரலாறு - புதுச்சேரியிலிருந்து பாஜகவின் முதல் ராஜ்யசபா எம்.பி. புதுச்சேரியிலிருந்து ஒருமனதாக ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.செல்வகணபதி ஜியை நான் வாழ்த்துகிறேன். இதேபோல் அசாமில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பானந்த் சோனாவால், மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோருக்கும் வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் செல்வகணபதிக்கு என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications