கொரோனாவால் பள்ளிகளுக்கு விடுமுறை.. அரசின் அறிவிப்பால் ஸ்டூடண்ட்ஸ் ஹாப்பி அண்ணாச்சி
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கு நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், வகுப்புகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து அங்கு தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வில்லை. நள்ளிரவு வரை மதுபான விற்பனையுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் தலையிட்டதையடுத்து மதுக்கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு பிறகு புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று கணிசமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது.
நாள்தோறும் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா வேகமாக பரவி வருவதன் காரணமாக ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நாளை முதல் அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக கூறியுள்ளார் மேலும் வகுப்புகள் இணையவழி கற்றல் மூலமாக மாணவர்களுக்கு தொடர்ந்து பாடம் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications