புதுவையில் மின் ஊழியர்கள் போராட்டம்: போலீஸ் கட்டுப்பாட்டில் 16 மின் நிலையங்கள்.. துணை ராணுவம் வருகை?
புதுவை: புதுச்சேரியில் 16 துணை மின் நிலையங்களை காவல்துறை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது என்றும் இதேபோல் நிலைமையை சமாளிக்க துணை ராணுவம் புதுச்சேரி வர இருக்கின்றனர் எனவும் புதுவை மின்சார துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மின் துறையை தனியார் மயமாக்கும் முயற்சிகள் நடப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதை உறுதி படுத்தும் வகையில் டெண்டர் அறிவிப்பு வெளியானது.
இது மின் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

வேலை நிறுத்த போராட்டம்
உடனடியாக புதுவை அரசின் இந்த செயலை கண்டித்து மின்சார துறை ஊழியர்கள் கடந்த 28 ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மின் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் சுமார் 2,000 பேர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மின் துறையில் உள்ள பாதிப்புகள் அடியோடு பாதிக்கப்பட்டன. ஒப்பந்த ஊழியர்களை கொண்டு ஓரளவு மின் விநியோகம் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எஸ்மா சட்டம் பாயும்
ஆனாலும் மின் பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டது. மின்சார ஊழியர்களின் போராட்டத்தால் நேற்று புதுவை இருளில் மூழ்கியது. இதையடுத்து, தற்காலிக ஊழியர்களை கொண்டு நிலைமை சீர் செய்யப்பட்டது. மின்சார் ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும் என்று புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரித்தார். இருந்தாலும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.

வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
இதனிடையே, புதுவை மின்சார துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் இது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து நமச்சிவாயம் கூறியதாவது:- பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பியூஸ் கேரியரை பிடுங்கிய ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பேச்சுவாரத்தை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு முடிவு செய்வோம். மின் வாரியத்தில் பியூஸ் கேரியரை பிடுங்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை கட்டுப்பாட்டில்
துணைமின் நிலையங்களில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின் துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்கும் திடடம் இல்லை. போராட்டத்தால் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதால் விரைவில் மத்திய ரிசர்வ் படையினர் புதுச்சேரி வருகை தர உள்ளனர். 16 துணை மின் நிலையங்களும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது'' என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications