இருளில் மூழ்கிய புதுச்சேரி! மின்துறை தனியார்மயத்துக்கு எதிரான போராட்டம்-ஆளுநர் தமிழிசை வார்னிங்!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு மின்துறையை தனியார்மயமாக்குவதை எதிர்த்து மின்வாரிய ஊழியர்கள் 5-வது நாளாக தொடர் போராட்டம் நடத்துவதால் ஒட்டுமொத்த யூனியன் பிரதேசமும் இருளில் மூழ்கி உள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் நள்ளிரவில் தீப்பந்தம் பிடித்து போராட்டம் நடத்தினர். மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்துக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் பாஜக- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. அண்மையில் புதுச்சேரி மின்சார வாரியத்தை தனியார்மயமாக்க புதுச்சேரி பாஜக கூட்டணி அரசு தீர்மானித்தது.

தொடர் போராட்டம்
புதுச்சேரி பாஜக அரசின் இந்த முடிவுக்கு மின்வாரிய ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி மின்வாரியத்தை தனியார்மயமாக்குவதில் புதுச்சேரி பாஜக அரசு உறுதியாக உள்ளது. இதனால் மின்வாரிய ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் குதித்தனர்.

இருளில் மூழ்கிய புதுவை
புதுச்சேரியில் கடந்த 4 நாட்களாக மின்வாரிய ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் ஒட்டுமொத்த யூனியன் பிரதேசமும் இருளில் மூழ்கி உள்ளது. இதனால் கொந்தளித்த பொதுமக்களும் இரவும் பகலும் போராடி வருகின்றனர். இரவில் தீப்பந்தம் ஏந்தியபடி பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினர். மின்தடையால் பெரும்பாலான இடங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் பல மணிநேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு இடையூறு கூடாது
இந்நிலையில் புதுச்சேரி மின்வாரிய ஊழியர்களுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: புதுச்சேரியின் கள நிலவரத்தை தலைமைச்செயலாளர் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கண்காணித்து மின் தடையை உடனே சரிசெய்ய வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளேன். பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

சட்டபூர்வமான நடவடிக்கை- தமிழிசை எச்சரிக்கை
அதையும் மீறி பொதுமக்களை சிரமப்படுத்தி தங்களின் கோரிக்கைகளை அறவழியில் போராடாமல்,பொதுமக்களுக்கு துன்புறுத்தும் போராட்டங்களிலிருந்து மக்களை காக்கும் பொறுப்பும்,கடமையும் அரசுக்கு இருப்பதால் அதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்பதை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications