கிரண்பேடி தான் அவர் டார்கெட்.. எவ்ளோ சொல்லியும் கேட்கல - நமச்சிவாயம் ஓபன் ஸ்டேட்மென்ட்
புதுச்சேரி: அரசின் நிர்வாகி சீர்கேட்டை சரி செய்யாமல் துணைநிலை ஆளுநர் மீது குறை கூறி ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சரை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நமச்சிவாயம் பேட்டி அளித்துள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்த அமைச்சர் நமச்சிவாயம், கடந்த 2 தினங்களாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில், இன்று சட்டப்பேரவைக்கு வந்த நமச்சிவாயம் தனது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சபாநாயகர் சிவகொழுந்துவிடம் அளித்தார். நமச்சிவாயத்துடன் ஊசுடு தொகுதியின் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை தீபாய்ந்தான் வழங்கினார்.

சிந்தனை இல்லாத முதல்வர்
ராஜினாமா கடிதத்தை அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நமச்சிவாயம், அரசின் நிர்வாக சீர்கேட்டை சரிசெய்யாத முதலமைச்சர் நாராயணசாமியை கண்டித்து இரண்டு பேரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்தார்.
துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்க்கும் பணியில் தான் முதலமைச்சரின் கவனம் முழுமையாக இருந்ததாக தெரிவித்த நமச்சிவாயம், மாநில மக்கள், வளர்ச்சி மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது முதலமைச்சருக்கு சிந்தனை இல்லாதது குறித்து கட்சி தலைமையிடம் பல முறை முறையிட்டும் கேட்காத காரணத்தால் பதவிகளை ராஜினாமா செய்தோம் என்றார்.
மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் பேசி கருத்துக்களை கேட்டு முடிவு செய்வோம். கட்சி பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு ஏற்கனவே அனுப்பி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்தக் கட்ட நடவடிக்கை
இதனிடையே ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை பெற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் சிவக்கொழுந்து, 'நமச்சிவாயம் மற்றும் தீபாய்ந்தான் ஆகிய இருவரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கொடுத்துள்ளனர். அதனை தற்போது பெற்றுக்கொண்டுள்ளோம். இந்த கடிதத்தை சட்டப்பேரவை செயலருக்கு அனுப்பி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்' என்றார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications