வரலாறு தெரியாம பேசுறாங்க.. சாவர்க்கர் யாரு தெரியுமா? தமிழிசை அழுத்தி சொன்ன வார்த்தை
புதுச்சேரி: சாவர்க்கரும் ஒரு சுதந்திர போராட்ட வீரர்தான் என்றும், அவர் பற்றிய வரலாற்றை அறியாதவர்களே சாவர்க்கரின் நினைவு கல்லை பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இந்தியா சுதந்திரம் பெற்று ஆகஸ்டு 15 ஆம் தேதியுடன் 75 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளன. இதனை அடுத்து நாடு முழுவதும் 75 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் இப்போதே கலைகட்டி இருக்கின்றன.
புதுச்சேரி அரசு தனது பங்கிற்கு சுதந்திர போராட்ட வரலாறு பற்றியும், சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சாவர்க்கர் பெயர்
அதில் ஒரு பகுதியாக புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்து இருக்கும் காந்தி திடலில் வைக்கப்பட்டு உள்ள தியாக சுவற்றில் விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவரும், இந்து மகா சபா தலைவருமான சாவர்க்கரின் பெயர் பொறித்த கல்வெட்டும் பதிக்கப்பட்டு இருக்கிறது.

கடும் எதிர்ப்பு
அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு ஆங்கிலேயர்களிடம் பல முறை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்க்கரின் பெயரை தியாகிகள் பட்டியலில் சேர்ப்பதாக கூறி பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், புதுச்சேரியில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழிசை சவுந்திரராஜன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழிசை பேட்டி
அப்போது அவரிடம் சாவர்க்கர் கல்வெட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழிசை, "வீர சாவர்க்கர் நாட்டுக்காக போராடி உள்ளார். படிக்க சென்ற இடத்தில் தேசிய கனலை ஊட்டியவர். சுதந்திர போராட்ட வரலாறு தெரியாதவர்கள் சாவர்க்கர் பெயர் பொறித்த கல்லை வைத்து பிரச்சனை செய்து வருகிறார்கள்.

அழுத்தமாக சொல்வேன்
வீர சாவர்க்கர் பெயர் பதித்த கல்லை வைத்ததில் எந்த தவறும் இல்லை. இதை அரசியலாக்க வேண்டாம். அரசியல் ஆக்கினாலும் எதிர்கொள்ள தயார். சுதந்திரத்துக்காக ஒரு சிறிய கல்லை எடுத்து போட்டாலும் அவர் சுதந்திர போராட்ட வீரர்தான். அவர்களையும் நாம் மதிக்க வேண்டும். யாரையும் கொச்சைப்படுத்தக் கூடாது. வீர சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்பதை எந்த சபையிலும் அழுத்தமாக என்னால் கூற முடியும்." என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications